Ad Widget

தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் , சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது...

சிறிதரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து, ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். அத்துடன் ”நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம்...
Ad Widget

யாழ் – சென்னைக்கு இடையில் மற்றுமொரு விமானசேவை!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார்....

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி போராட்டம்!!

இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி வியாழக்கிழமை (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றைப் பொதுமக்கள் முன்னெடுத்தனர். குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர் அவ்விடத்தில் தமது கடமையைச் செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 6:45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை...

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்....

மின்சாரக் கட்டணங்களில் மீண்டும் திருத்தம்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும்...

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி

சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன. இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக...

புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை!!

ரஷ்யா - உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல், சீனா - தாய்வான் பதற்றம் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர்களிடம், எக்ஸ் ஸ்பேசஸ் தளம் மூலம் கருத்துகள்...

முல்லைத்தீவில் கோர விபத்து – 6 பேர் காயம்!

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த...

யாழ் மரக்கறிகளின் வரவால் தம்புள்ளையில் ஏற்பட்ட விலை மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலத்தில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்த...

பலாலி கிழக்கில் சில காணிகளை விடுவிக்க முனைப்பு – சிவபாலசுந்தரன்

யாழ்ப்பாணம் பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் , தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கொழும்பிலிருந்து...

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள...

வலிகாமம் வடக்கில் முறியடிக்கப்பட்ட காணி அபகறிப்பு முயற்சி!!

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான...

வெப்ப அதிர்ச்சியால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை தண்ணீர்...

நாடளாவிய ரீதியில் காற்றின் தரம் குறித்து விசேட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சரிந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களும் ஆரோக்கியமற்ற காற்று நிலைமைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின் தரவுகளை மேற்கோள் காட்டி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!

“யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர்...

பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதி!

சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு...

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், வயது வந்தவர்கள் மூன்றரை லீட்டர் நீரும் சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரும் நாளொன்றுக்கு பருக வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தேசிக்காய் சாறு,...
Loading posts...

All posts loaded

No more posts