யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை!!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு - காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும்....

இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில்...
Ad Widget

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்த அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க...

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று...

யாழில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை!

அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச் சென்றபோது, அங்கு கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர்...

வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் பதிவு!

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். அவரது கூற்றுப்படி, இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் வட மாகாணத்தில் பாதிவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

யாரை திருமணம் முடித்துள்ளேன் என்றும் கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள் – இளங்குமரன்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதை கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதை கூறிக்கொள்கின்றேன் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான...

யாழில் உயிரியல் விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்!!

நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று உயர்தரப் பரீட்சை மையமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளன. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்துடன், தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....

யாழில். திடீரென அதிகரித்துள்ள டெங்கு , சிக்குன்குனியா!! – மக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் அத்துடன் வைரஸ் காய்ச்சல் சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில்...

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேறடறு முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் ஞா.ஸ்ரீநேசன் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் அரசியல்தீர்வு மாகாண சபை...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்களே அவதானம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 22 ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நகர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுத் நிலையம் வெளியிட்டுள்ள எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் அவதானமாகக் கவனிக்குமாறு...

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமராட்சி மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தழிப்பு!

வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகை...

செம்மணி மனித புதைகுழி முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் ; கண்டெடுக்கப்பட்ட நகைகள் வடக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு...

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது : ஏன் இன்னும் ஆடுகிறார்கள் – ஜனாதிபதி

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என...

அதி கூடிய மழை வீழ்ச்சி 101.7 மி.மி யாழ்ப்பாணத்தில்!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மிமி மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு...

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த சிலை!!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான...

கட்சிபேதங்களை கடந்து அனைவரும் எதிர்க்க வேண்டும்!

இனக்குரோதத்தை தூண்டும் வகையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சரது உத்தரவில் சட்டவிரோத புத்தர்சிலை திருகோணமலையில் நிறுவப்பட்டமையை கண்டித்து அனைத்து தரப்புக்களும் கட்சிபேதங்களை கடந்து எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன...

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப்...
Loading posts...

All posts loaded

No more posts