Ad Widget

நெடுந்தீவில் ஐவர் வெட்டிப் படுகொலை! ஆறாவது நபர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி ! விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் இன்று(22) காலை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில்...

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து தமிழகம் சென்ற புறா காலில் சீன எழுத்துக்கள்!!

இலங்கையில் இருந்து வந்ததாக நம்பப்படும் புறா ஒன்று தமிழகம் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரை சேர்ந்தவர் அரச குமார். இவர் கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காலில் பிளாஸ்டிக் கட்டிய...
Ad Widget

யாழ்.நல்லுாரில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்து உரிமையாளர் மீது சாணித் தண்ணீர் ஊற்றி தாக்குதல்!

யாழ்.நல்லுார் - செட்டித்தெருவில் உள்ள விடுதி ஒன்றக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சாணி தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாக்குதலுக்கு இலக்கான விடுதி உரிமையாளர் கூறுகையில், அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட குழுவே தன் மீது தாக்குதல் நடத்தியதாக...

யாழில் பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை ; பொலிஸார் விசாரணை

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல்...

வட, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் – அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத தடைச்...

பல ஆயிரக்கணக்கான இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவில் விற்பனை – வெளியான அதிர்ச்சித் தகவல்

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. 60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள்...

யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றால் ஒருவர் மரணம்!!

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் உரிய முறையில் பொதி செய்யப்பட்டு இறுக்கிரியைகளுக்காக உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு...

உக்ரைன் வான்வெளியில் திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்!

உக்ரைன் தலைநகரில் திடீரென்று தோன்றிய மர்ம பொருள் ஒன்று சில நிமிடங்களில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரின் வான்வெளியில் மர்ம பொருள் தோன்றியதும், வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் நகரம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்பில் சந்தேகம் எழுந்ததால், வான் தாக்குதல் எச்சரிக்கையும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள்,...

மனநலம் அவசியமானதா? -வைத்திய கலாநிதி  சத்தியமூர்த்தி

போலித்தனத்தை/ போலி வைத்தியத்தை புறந்தள்ளி உயிரை பாதுகாத்தல் மற்றும் உடல்நலத்தை பேணுதல். அண்மை காலமாக "தெய்வ வைத்தியராக" தன்னை தானே புகழ்ந்து பாடும் ஒருவர் நோயாளிகளை ஏமாற்றுகின்றமை உண்மையில் ஒரு வியப்பான செயல்!!! நம் நாட்டில் ஆங்கில மற்றும் சுதேச மருத்துவம் (சித்த, ஆயுள்வேத, யுணானி) அங்கிகாரம் பெற்ற சுகாதார சேவைகள் ஆகும்.துரதிருஷ்டவசமாக சில "போலி...

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார். மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய...

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா ஐ.ஓ.சி!

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை...

தாங்கள் யாரிடமும் குரங்குகளைக் கேட்கவில்லை என சீனா கைவிரிப்பு.

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம்...

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....

கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் புதன்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் நேற்று(19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பலி

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா! கடும் கோபத்தில் புடின்

கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் ரொறன்ரோவின்...

படகு சேவையை தொடங்குவதற்கான இந்தியாவின் அனுமதியில் தாமதம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி...

யாழ்.மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!!

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை...
Loading posts...

All posts loaded

No more posts