Ad Widget

வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டிவிட்டு கொள்ளையிட முயற்சித்தவர் மக்களால் மடக்கி பிடிப்பு!!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டிவிட்டு கொள்ளையிட முயற்சித்தவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள...

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள்!!

கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன்...
Ad Widget

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை செல்வபுரம்...

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தால்!!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு...

சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லையென அறிவிப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 7.3 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்! இரு நாட்டு படைகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை!!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்டானிட்சியாவில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கும், வாக்னர் குழுவின் கூலிப்படையினருக்கும் இடையே இவ்வாறு சண்டை வெடித்துள்ளது. மேலும் இந்த...

வெடுக்குநாறிக்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது!!

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த...

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக...

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,...

முன்னாள் தவிசாளர் கைது!!

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்...

5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வீட்டில்...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். . கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தலா 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரெழு பகுதியை சேர்ந்த...

இலங்கையில் மீண்டும் நில நடுக்கம்!!

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என...

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் சுமார் 7.2 ரிக்டர் அளவில் இன்று காலை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை...

ரஷ்யாவுக்கு எதிராக மூர்க்கமாக களமிறங்கும் மற்றொரு நாடு!!

உக்ரைன் - ரஷ்ய யுத்தக் காட்சிக்குள் மிகவும் மூர்க்கமாக நின்று செயலாற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு போலந்து. உக்ரைனுக்கு நிகராக ரஷ்யா மீது மூர்க்கத் தனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்றும் போலந்தை குறிப்பிடலாம். உக்ரைனுக்கான மேற்குலகின் ஆயுத வழங்கல்கள் அத்தனையுமே போலந்து வழியாகவே உக்ரைனுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. உக்ரைன் படையினருக்கான மேற்குலகின் பயிற்சிகளில் அனேகமானவை...

நெடுந்தீவு படுகொலைக்கு காரணம் பழைய பகை -கொலையாளி வாக்குமூலம்

நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஜெர்மன் குடியுரிமையுள்ள 50 வயதானவர். நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களும், ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டனர். வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (74), நாகநாதி பாலசிங்கம் (75), அவரது...

அருண் சித்தார்த் கைது

  நேற்று முன்தினம்  (20) இரவு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள லக்ஸ் புதுமுக ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான யெயந்திரன் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அருண்சித்தார்த் உட்பட பலர் யாழ்.பொலிஸாரால்...

யாழ். நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவரின் கொலை விவகாரம்! ஒருவர் கைது

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர்  என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
Loading posts...

All posts loaded

No more posts