Ad Widget

யாழ்.நல்லுாரில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்து உரிமையாளர் மீது சாணித் தண்ணீர் ஊற்றி தாக்குதல்!

யாழ்.நல்லுார் – செட்டித்தெருவில் உள்ள விடுதி ஒன்றக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சாணி தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தாக்குதலுக்கு இலக்கான விடுதி உரிமையாளர் கூறுகையில்,

அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட குழுவே தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் லக்ஸ் ஹோட்டலுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட குழு கார் ஒன்றில் வந்து இறங்கி, ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , ஹோட்டல் கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts