Ad Widget

கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில நாடுகள் ஏற்கனவே முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி கூறியுள்ளார். மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

இ.போ.ச சாரதியின் கவனயீனம் – கிளிநொச்சியில் 17 வயது மாணவியின் உயிர் பறிபோனது!

கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள்...
Ad Widget

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல – நாகலிங்கம் வேதநாயகம்!

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன் நான்...

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை...

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறப்பு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!!

முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய ரஜதஹன மற்றும்...

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? கலாநிதி ஆறு. திருமுருகன்

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, சென்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் நேற்று முற்பகல்...

கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

யாழ். இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு!

நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் சம்பிரதாயபூர்வமாக இன்று கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்...

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் மீதான விவாதங்கள்...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 22 ஆயிரத்து 789 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...

கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல் – மக்களே அவதானம்!

கொரோனாவுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது!

15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு...

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் தலைதுாக்கும் கொரோனா அபாயம்! – மாவட்டச் செயலர் க.மகேஸன்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரிப்பதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய...

ஈழத்து எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் காலமானார்

யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும்...

யாழ்.போதனா மருத்துவமனை குருதி வங்கியில் ஆகக் குறைந்தளவு பாதுகாப்பு குருதியும் இல்லை

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கி அறிவித்துள்ளது. “யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத...

மக்கள் ஆதரவளிக்காவிடின் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார அமைச்சர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் எனவும் சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக கோவிட்-19 நோய்க்கு எதிராக அரசு இவ்வளவு உயர்ந்த நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்...

சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்...

நாடு மீண்டும் முடக்கப்படலாம் – ஜனாதிபதி

நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இருப்பினும் போராட்டங்கள்,...

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading posts...

All posts loaded

No more posts