Ad Widget

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் தலைதுாக்கும் கொரோனா அபாயம்! – மாவட்டச் செயலர் க.மகேஸன்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரிப்பதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைப்போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றார்.

poll

Related Posts