‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
Ad Widget

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் சீரமைப்பில் இந்த நிலை ஏன்?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து...

வடக்கு உள்ளிட்ட 3 மாகாணங்களில் கனமழை வீழ்ச்சியும் காற்றின் வேகமும் அதிகரிக்கும்!!

வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 5.30 மணிதொடக்கம் அடுத்த 36 மணி நேரத்தில் 150 மில்லி மீற்றர் பலத்த மழை வீழ்ச்சியும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்...

அடுத்த 36 மணித்தியாலத்தில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில்இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ளவர்களுக்கான அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சீரற்ற காலநிலை – 3,300 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு நேற்று (9) மதியம் ஒரு மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைதெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்...

எரிபொருள் விலை அதிகரிப்பு?

எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்காலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மற்றும் மீன்பிடி துறையினர் இல்லாத பகுதிகளுக்கு மண்ணென்னெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 4 ஆவது அலையை இலங்கை அண்மித்துள்ளது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கை தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அபாய நிலைமையிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு பெற முடியும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...

வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமேல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்அனுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா...

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது....

நாட்டில் நேற்று 679 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் நேற்று(திங்கட்கிழமை) 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 312 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே...

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை – அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர்...

தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்!

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின்...

வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு!

வடமாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று ஒருங்கிணைவு காரணமாக இன்று முதல் (திங்கட்கிழமை)...

150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென்றும் அத்திணைக்களம் எதிர்வகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், வடமேல்...

சீனி, அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு பெரிய விடயமல்ல : விலையேற்றத்தால் எவரும் உயிரிழக்கவில்லை- ரஞ்சித் பண்டார

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமைக்கு அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7...

காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன்

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வௌயிட்ட அவர், “இந்த அரசாங்கமானது பொய்யான...

10 – 13ஆம் வகுப்புகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொரோனா தடுப்பு குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, இன்று கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...
Loading posts...

All posts loaded

No more posts