Ad Widget

யாழில் ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அமரர் ரவிராஜின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts