Ad Widget

கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல் – மக்களே அவதானம்!

கொரோனாவுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள் பெருகும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது 23 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நவம்பர் மாதத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆயிரத்து 361 வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாகவும் இந்த நவம்பரில் வெறும் 10 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 1,000 மதிப்பெண்ணைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts