Ad Widget

கண்கவர் மெய்நிகர் திறப்பு விழாவுடன் இன்று ஆரம்பமாகும் எல்.பி.எல். தொடர்

இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் இன்று (நவம்பர் 26) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மாலை 6.50 மணிக்கு ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரானின் தொடக்க விழாவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் (augmented and...

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டது. இதனால், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு...
Ad Widget

உரிமையைத் தடுக்க முடியாது- மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் தேசியக் கட்சிகள் அழைப்பு!

எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05இற்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு குறித்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்து...

நிவர் புயல் தமிழகக் கரையை அடைந்தது – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் என்ற சூறாவளியானது தமிழகக் கரையை ஊடறுத்து வடமேல் திசையில் நகர்வதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியள்ளது. இதன்காரணமாக வடமேல், மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல்...

மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த...

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று காலை இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடதிபதியுமான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி...

கோவிட் – 19 தொற்றை முற்றாக ஒழிக்க இரண்டரை ஆண்டுகளாகும்; அதுவரை மாணவர்களின் கல்வியை வீணடிக்க முடியாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

கோவிட்-19 தொற்று நோயின் சவால் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை நிறுத்தி வைப்பது “நடைமுறைக்கு மாறானது” என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கல்வி அமைச்சர் பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று நோயின் சவாலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆண்டு தரம்...

வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றங்களில் முன்னிலையாக மூத்த அரச சட்டவாதிகளுக்கு சட்ட மா அதிபர் பணிப்பு!

வடக்கு மாகாணத்தில் இந்த வாரம் நடத்தத் திட்டமிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நீதிவான் நீதிமன்றங்களில் முன்னிலையாகி உண்மைகளை வெளிப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்தத் தகவலை சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், அரச...

யாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தபுராண வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார். அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை...

யாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது

யாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரான சட்ட மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய தர்மலிங்கம் தயாகரன் என்பவரே இவ்வாறு...

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு!

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துறை கடற் பிரதேசத்தில் இருந்து 325 கி.மீ தூரத்தில் கடற் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை...

ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து வந்த செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில்...

கிளிநொச்சி முதியவருக்கு கோரோனா தொற்று; குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகிப்பவர்கள் காரணமா?

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்க...

யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!!

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர்...

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம்...

யாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) 322 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக...

அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் யாழ்ப்பாணம்- அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றம் புயல் உருவாக்கம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை...

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்! – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது-63) ஜனாதிபதியிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கனகசபை தேவதாசன்‌ (வயது-63) ஆகிய நான்‌ பயங்கரவாதத்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்‌. கொழும்பு மேல்‌ நீதிமன்றில்‌ சட்ட...

கொரோனா அச்சம்: கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்...

கொழும்பிலிருந்த வந்தவருக்கு கொரோனா!! 43 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

கிளிநொச்சி - திருவையாற்றில் மரண வீட்டிற்கு கொழும்பிலிருந்த வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சுமார் 43 குடும்பங்களை சேர்ந்ந்த 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண வீட்டில் கலந்துகொண்டவர்களை தேடும் பணியை சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இருந்து திருவையாறு மரண நிகழ்விற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான...
Loading posts...

All posts loaded

No more posts