- Saturday
- April 27th, 2024
யாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிவிப்பில், “கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள்,...
சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. மேலும், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர், குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில்...
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவரை கொவிட் 19சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த...
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும்...
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டார். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரன், ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக நேற்று மாலை 5.50...
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி...
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து சாரதி துாங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய்...
கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இவர்கள் யார்? இவர்கள் எதற்காக தம் உயிரை அர்ப்பணித்தார்கள்? இந்த இளையவர்கள் தமது இளவயதில் தமது இளவயதுக்கே உரிய ஆசைகளை துறந்து ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்காய் போராடி தம் உயிரை ஆகுதியாக்கியவர்கள். இவர்களும் எல்லோரையும்...
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது. 2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும்...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளெ பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளைக் குறிப்பிட்டு பலரும் முகநூலில் பதிவிட்டுள்ளனர். அவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தவர்களில் தமிழீழ விடுதலைப்...
நாட்டில் நேற்றையதினமும் 553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18ஆயிரத்தைக் கடந்து 18 ஆயிரத்து 491ஆக...
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில்...
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் சி.இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , அவரதுதொலைபேசி மற்றும் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி, யாழ் பல்கலைகழகத்தின் மூன்றாம் வருட மாணவன் சி.இளங்குன்றன் கோண்டாவில் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் சுருக்கிட்டதால் மூச்சு...
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி, உறவினர் வீடுகள், பொதுமண்டபங்கள், பொது இடங்களில் தங்கியுள்ளனர். அதேவேளை அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் யாழ்.மாநகர சபை உறுப்பினரும்...
இலங்கையில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளம் காணாத வரையில், இது சிங்கள நாடு என நினைத்துக்கொண்டுள்ள வரைக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் பந்தாடப்பட்டுக்கொண்டே இருக்கும். தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிராகரித்து செயற்படும் வேளையில் உங்களின் அரசியல் விளையாட்டில் நீங்கள் கண்டிப்பாக சீரழிவீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில்...
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், ‘மாவீரர்கள் எமது மண்ணின் காவலர்கள். இந்த மண்ணையும் மக்களையும் அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாகத் தேசிய விடுதலைப்...
தென்மராட்சிப் பகுதியில் 25 பயனாளிகளுக்கு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் ஊடாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளின் கீழ் வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக் கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே / 298 , ஜே / 297 , ஜே / 294...
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை 2020ஆம் ஆண்டிலேயே யதார்த்தமாக்கும் வகையில் அறிமுகப்படுத்தும் இந்த காப்புறுதி திட்டம் புத்தசாசன சமய மற்றும் கலாசார...
Loading posts...
All posts loaded
No more posts