Ad Widget

புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் – விஷேட வைத்திய நிபுணர்

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார் , எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தற்போது இனங்காணப்படும் நோயாளர்களில் வைரஸின்...

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்களை மீண்டும் மூடத்தீர்மானம்!

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ad Widget

போதைப்பொருள் ஊக்குவிப்பு, வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார...

கோரோனா பரவல்; வரும் 7 நாள்கள் தீர்மானம் மிக்கவை – இராணுவத் தளபதி

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். “நாட்டின் பல்வேறு பகுதிகளில் 16 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கோரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது” என்று அவர்...

மதத் தலங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளுமாறு அரசு கோரிக்கை!!

அனைத்து மதத் தலங்களுக்கும் செல்வதை இயலுமான வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நேற்றையதினம் (07) புதன்கிழமை இந்த அறிவிப்பை அறிக்கை ஒன்றின் ஊடாக விடுத்துள்ளது.

கடலில் பயணம் செய்வோருக்கும் மீனவ சமூகத்துக்கும் எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்...

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமைக்கும் இந்தியர்களுக்கும் தொடர்பு இல்லை!

கம்பஹா – மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமைக்கும் இந்தியர்களுக்கும் தொடர்புண்டு என கூறுவது உண்மைக்கு புறம்பான விடயம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...

கோரோனா பாதித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!!

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய முதியவர், ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ள நிலையில் அவரைக் கண்டறிவதற்கு உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது. இல. 307 வத்த, பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற குறித்த நபரை அடையாளம் கண்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற அவசர இலக்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என...

முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும்...

யாழில் நீண்ட காலமாக கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!!

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், காரைநகர், கொடிகாமம் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி...

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டார்!!

ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்படாமலிருந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி அவருடைய இருப்பிடத்திலேயே இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச மருத்து அதிகாரி இதற்கான நடவடிக்கைகளை...

வடக்கில் 6 ஆயிரத்து 682 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் – பிரதமர்

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் நேற்றையதினம் (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களால் வசந்தபுரம் நாவாந்துறை அண்ணா சனசமூக நிலையத்தில்...

புங்குடுதீவு மற்றும் சாவக்ச்சோியை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா!!

ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான 10 போில் 9 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் யாழ்ப்பாணம்...

பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொல்லவில்லை; இறுதி புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்திய இராணுவ சீருடையிலிருந்தனர்: பொன்சேகா!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்தார், அவரை இராணுவம் கொல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (6) நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அகில இலங்கை தமிழ்...

அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு...

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது – அமைச்சர் டக்ளஸ்

போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து...

யாழில் இன்று முதல் தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன்...

நாடுமுழுவதும் விழாக்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை!!

நாட்டில் மறுஅறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts