Ad Widget

யாழில் நீண்ட காலமாக கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!!

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய், காரைநகர், கொடிகாமம் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக பெரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள் உள்ளன.

சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts