Ad Widget

ஆவா வினோதனின் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள போருள்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச்...

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது கொரோணா இரண்டாம்...
Ad Widget

நாட்டில் இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி,...

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல்!!

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் நேற்றையதினம் (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று மாலை (06)...

புங்குடுதீவு- குறிகட்டுவான் ஊடான தீவுப்பகுதிக்கான படகு சேவைகள் நிறுத்தம்!!

புங்குடுதீவு - குறிகட்டுவான் ஊடாக தீவு பகுதிகளுக்கான படகு சேவைகள் இன்று தொடக்கம் முற்றாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புங்குடுதீவு ஊடான பொது போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் வீடு திரும்பிய நிலையில் அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பயணித்தோர் தயவு செய்து அடையளப்படுத்துங்கள்.. மீண்டும் பணிப்பாளர் கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த இ.போ.ச பேருந்தில் பயணித்த ஒரு சிலரே தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் ஏனையவர்களும் தம்மை அடையாளப்படுத்துமாறு மாகண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கேட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து - கொடிகாமம் வந்து பின்னர் பருத்துறைக்கு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் அனைத்தும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது ; அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் !

இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின்...

வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222...

பருத்தித்துறை பஸ்ஸுலும் கோரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும்...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் – குறித்த பகுதிக்கு பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து...

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும்...

வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தற்போதுள்ள கொரோனா சமூக தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ண அவசர கோரிக்கை விடுத்துள்ளார் தற்போதுள்ளகொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வடக்கு...

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் – சி.யமுனாநந்தா

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோணா தொற்றானது மீண்டும் சமுகமட்டத்தில் பரவும்...

இலங்கையில் சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன....

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இணங்காணப்படவில்லை. இது போன்று சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மக்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றோம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயற்பாட்டு...

உதைபந்தாட்ட அணியின் சின்னத்தில் உறுமும் புலிகள்- பொலிஸ், இராணுவம் எதிர்ப்பு

வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது. அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ...

புங்குடுதீவில் பூசகர் கொலை; சந்தேக நபர்கள் மூவரும் கட்டுக்காவலில்

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய பூசகர் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட...

தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை- அரசாங்க அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல தனியார் வகுப்புக்களும் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அனைத்து முன்பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது. கம்பஹா...

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. இதுத் தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து...
Loading posts...

All posts loaded

No more posts