Ad Widget

நாடுமுழுவதும் விழாக்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை!!

நாட்டில் மறுஅறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த பணிப்பை அவர் விடுத்துள்ளார்.

Related Posts