Ad Widget

மன்னாரில் 922க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்- பதில் அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். மன்னார்- பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443பேரும் பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது கும்பலொன்று தாக்குதல்!

முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்...
Ad Widget

யெங் ஜியேச்சி உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு!

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் கடந்த 9ம் திகதி அன்று அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்...

ரிஷாட் பதியூதீனின் சகோதரரை மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில்...

யாழ். பல்கலை. விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த...

யாழில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்!!

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினர் மறு...

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பேருந்து சேவைகளும் இடை நிறுத்தம்! ஆயர் இல்லமும் மூடப்பட்டது!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அனைத்து பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள...

அனலைதீவுக்கான போக்குவரத்து சேவை நிறுத்தம்!!

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாணம் – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கடற்படையினரின் உதவியுடன்...

கம்பஹாவிலிருந்து வடமாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட...

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் ஆலோசனை

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றையதினம் ( 2020.10.08 )அறிவுறுத்தினார். சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே...

மன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையிலான அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு, அதனால் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் அமைதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் காணொளிப் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்று (வியாழக்கிழமை) காலை, கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட...

வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு? – முக்கிய தகவலினை வெளியிட்டார் அஜித் ரோஹன!

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் கண்டெடுப்பு!

வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் சஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நேற்று மாலை இராணுவ உள்ளக...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

திவுலபிடிய மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. நேற்று மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 18 பேருக்குமே இவ்வாறு கொரோனா...

பிரபாகரனின் மகன் குறித்து கருத்து தெரிவித்த பொன்சேக்கா மன்னிப்புக் கோரவேண்டும் – சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி என கூறியதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும்...

தெல்லிப்பழை வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சை சீராக இடம்பெறவேண்டும்!

“தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்கச் சிகிச்சை ஒழுங்குமுறையில் இடம்பெறவேண்டும்” என்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டாணை உத்தரவை வழங்கியது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை மறுக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இந்த கட்டாணை உத்தரவை...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள்! – ரெலோ வேண்டுகோள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை இன்று (வியாழக்கிழமை ) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் “தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா...

கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவருக்கு கொரோனா தொற்று!!

கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இறுதியாக கடந்த 4ஆம் திகதி ஐ.சி.பி.டி வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக ஐ.சி.பி.டி. கெம்பஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போது குறித்த மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்தும் விரைவில் நடவடிக்கை...
Loading posts...

All posts loaded

No more posts