Ad Widget

பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை; உதவிக் கல்விப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா...

சமூக பரவல் கட்டத்தில் இலங்கை!! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியிலிருந்து, துணைக் கொத்தணிகள் உருவாகுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே இதனை தெரிவித்தார். “வைரஸ் சமூக பரவலுக்கு வழிவகுக்குமா அல்லது அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவியிருக்கிறதா என்பதை அடையாளம் காண நிலைமையை கண்காணிக்க...
Ad Widget

நாட்டில் நேற்று 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்றையதினம் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 166 பேருக்கும் வெளி நாட்டிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,464 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நட்டில்...

வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் – வைத்தியர் கேதீஸ்வரன்

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை...

கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு!!

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பரிவுகளுக்கு உடடினாய அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்று வியாபார நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப்...

கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, சீர் சிறப்போடு வாழ்ந்திட நவராத்திரி விழாவில் பிரதமர் வாழ்த்து!

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய...

வவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா!

வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன....

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று!!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட கொத்தணியிலிருந்து கொரோனா சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒரு தொகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு...

தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியவர்கள் இருக்க கூடிய வீடுகள் இது குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

மேலும் 120 பேருக்கு கோரோனா தொற்று

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியின் தொடர்ச்சியாக மேலும் 120 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். நேற்று மட்டும் 180 பேர் கோரோனா தோற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து...

கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!!

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று ஒரு பூகோளபரம்பல் தொற்றுநோயாகும் இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று...

முல்லையில் கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை!! மீனவர்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்....

நாட்டில் மேலும் 60 பேருக்கு கோரோனா!!

நாட்டில் மேலும் 60 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகள் இரண்டைச் சேர்ந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 259 கோவிட் -19 நோயாளர்கள்...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்!!

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர், இ.கி.அமல்ராஜ், இதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளயிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளரால் கடந்த 13ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...

சுமார் ஒன்றரை இலட்சம் தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படலாம்!! – நளின் பண்டார

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் சமூகத்தில் காணப்படலாம். எனவே அரசாங்கம் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , குருணாகல்...

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றி வீடு சென்ற கடற்படை சிப்பாய்க்கு கொரோனா

கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் உள்ள ராஜபிஹில்லா (Rajapihilla) பகுதியில் வசிக்கும் 21 வயதான பெண் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் காங்கேசந்துறை பகுதியில் உள்ள ஒரு கடற்படை முகம் ஒன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுவதுடன் இவர் விடுமுறையில் தனது வீட்டிற்கு...

மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 21 பேர் அனுமதி!!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடயைச் சேர்ந்தவர்கள் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று கண்டறியப்பட்டது. அவர்கள் 21 பேரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டனர்....

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சேவையில் ஈடுபட்டுவரும் சாரதி!

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களத்தினால் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்ட...
Loading posts...

All posts loaded

No more posts