மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியின் தொடர்ச்சியாக மேலும் 120 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.
நேற்று மட்டும் 180 பேர் கோரோனா தோற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 805 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.