Ad Widget

நாட்டில் மேலும் 60 பேருக்கு கோரோனா!!

நாட்டில் மேலும் 60 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகள் இரண்டைச் சேர்ந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 259 கோவிட் -19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 685 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts