Ad Widget

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு காரணம்!!! – வெளிவந்த முக்கிய தகவல்

உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்கு காரணம் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள...

53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர்!!

வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால்...
Ad Widget

மோட்டார் வாகன திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்!!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்று நிலமை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அழககோன் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார். இதன்...

பேலியகொட கொரோனா தொற்றாளர் மன்னாருக்கு தப்பிவந்த நிலையில் கைது!

கொழும்பு, பேலியகொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் மன்னார், புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதியானவரே இவ்வாறு மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்துள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மன்னார் மாவட்ட...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து...

நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவிக்கும் வரையில் இரத்து!!

கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவித்தல் வரும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர மோட்டார் வாகன...

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

சிங்கள் பெளத்த ஆட்சியினுடைய உக்கிரமான நிலைப்பாடுதான் 20 வது திருத்த நிறைவேற்றம் எனத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் இனப் பிரச்சினைக்கான தீர்வை நேக்கிய பயணத்தை ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...

மாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு!

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.   https://www.jaffnajournal.com/archives/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f.html

கோரோனா நோயாளி தப்பி ஓட்டம்; கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவிக் கோரிக்கை

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 26 வயதுடைய அந்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் உள்ள கோவிட் -19 சிகிச்சை...

கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம்...

வீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம்!!

மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 வாள்கள், கோடாரி...

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே தொடருந்தில் பயணம் செய்யுங்கள் – ரயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தொடருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்ததாவது; கோவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு அதிவேக தொடருந்து...

இலங்கையில் கோரோனா தொற்றால் 14ஆவது நபர் உயிரிழப்பு!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார். நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்தவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவருக்கு...

பொது அறிவுப் பரீட்சையில் 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை தோற்றவேண்டியது அவசியமில்லை!!

நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை அந்தப் பாடத்துக்கான பரீட்சைக்குத் தோற்றவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர், சனத் பூஜித விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன

நாட்டை முடக்குவது குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இராணுவத்தளபதி!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும்...

வித்தியாரம்பம் செய்வதற்கு எதிர்வரும் 26ஆம் திகதியே சிறந்தநாள் – ஐயப்பதாச குருக்கள்

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால்....

நாட்டில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது!

நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆறு பேர் பேலியகொட மீன் சந்தைத் தொழிலாளர்கள் எனவும் ஏனைய 22 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்...

வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியாளர்களில் மேலும் இருவருக்கு கோரோனா!!

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் இரண்டு தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 5 தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வவுனியா பிராந்திய சுகாதார...

மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தின் முன்னுள்ள வேகத்தடை அருகில் தங்கச்சங்கிலி வழிப்பறிக்கொள்ளை

யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது , வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயும் மகளும் மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு முன் வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடைக்கான உயரத்தில் வேகத்தை குறைத்தவேளை திடீரென அவ்வழியால் மோட்டார் சைக்கிளில்...
Loading posts...

All posts loaded

No more posts