Ad Widget

நீங்கள் பயணிக்கும் பேருந்து இலக்கங்களை நினைவில் வைத்திருங்கள்!

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் தாம் பயணிக்கும் பேருந்துகளின் இலக்கத்தை நினைவில் வைத்திருக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், பேலிகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய ஏராளமான நோயாளிகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. எனினும், பேருந்து இலக்கங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. எதிர்காலத்தில் தடமறிய பேருந்து இலக்கங்களை நினைவில்...

யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம்...
Ad Widget

நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை மக்கள் வழங்கவில்லை – பிரதி பொலிஸ்மா அதிபர்

வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அந்த மக்கள் வழங்கவில்லை. என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள்...

வேகக்கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து!! சாரதி சாவு!!

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அச்சுவேலி குட்டியபுலத்தைச் சேர்ந்த சீலன் (வயது -31) என்பவரே உயிரிழந்தார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டையிழந்த மாருதி...

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார். சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, இந்த அறிவித்தலையும் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதுடன், வெளி...

யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு!

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார...

இலங்கையில் 17 ஆவது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 42 வயதுடைய ஜா எல பகுதியை சேர்ந்த ஒருவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை...

குருநகர் – பாசையூருக்கு வெளியார் செல்வதற்குத் தடை!!

குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாள்கள் செல்வதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குருநகர் பகுதியில் இருவர் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் – வெளி நபர்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன....

வேலைவாய்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை – அங்கஜன்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று...

யாழ். பல்கலைக்கழக தீர்மானத்தால் வெளிவாரிப் பரீட்சார்த்திகள் விசனம்!

கொரோனாப்பெருந் தொற்று அபாயத்தையடுத்து நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களம் இம்மாதம் நடாத்தவிருந்த சகல பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ள நிலையிலும், பல்கலைக் கழகங்களின் விரிவுரைகளை ஒன்லைன் மூலமாக நடாத்துவதற்குப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த...

குருநகர், பாசையூர் பகுதி தனிமைப்படுத்தலில்!!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குருநகர், பாசையூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது. அந்தப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி...

குருநகர் கொரோனா தொற்று கொத்தணியாக மாறவும் சந்தர்ப்பம்!!

குருநகர் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாசையூர் மேற்கில் உள்ள கடலுணவு நிறுவனம் ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பியதும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் பேலியகொட சென்று திரும்பிய மறுநாளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அண்மையிலுள்ள...

கொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம்- தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு, அதிகம் ஆபத்தான பகுதிகளின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “27 பொதுசுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன. இதில் கொழும்பில் ஏழு...

கொரோனா வைரஸ்: நோயாளியின் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்

கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள்...

அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் – GMOA எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....

யாழில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்றையதினம்...

வடக்கில் சுகாதார கட்டளைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளுநர் பணிப்பு

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், பொலிஸாருக்குப் பணித்துள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள், முகக் கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகக்கு...

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து – கோப்பாய் மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்டச் செயலர், பாதுகாப்புப்...

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும்...
Loading posts...

All posts loaded

No more posts