Ad Widget

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே!- சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட  நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனது உரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வர் தடை போட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு கூட்டமைப்பால் மேலதிக  ஆசனம் ஊடாக  வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்...

எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைப்பு தரவில்லை- சம்பந்தன்

எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அதை நாம் மறந்துவிடமுடியாது. ஐநாவில் தீர்மானம் இயற்றும்போது அவர்கள் அதற்கு எதிராக இராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள் அதை நாம் மறந்துவிடமுடியாது. அதற்காக  முஸ்லிம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. முஸ்லிம் மக்களுக்கு நாம் எதிரானவர்கள்   அல்லர். முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் துன்பியல் சம்பவம். போராட்டத்தில் முஸ்லிம்...
Ad Widget

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும்...

அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்- சம்பந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் 2017ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு முன்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அரசாங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தெரிவதாகவும் கூறினார்....

சுவிஸில் தமிழர் சுட்டுக்கொலை

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம்  முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

அமைச்சர் மனோவின் அறிவுறுத்தலில் ஆளுனர் தமிழில் மீண்டும் பதில் கடிதம் !

நேற்று மாணவர் ஒன்றியத்தினால் ஆளுனருக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கள கடிதத்திற்கு பதிலாக ஆளுனர் இன்று தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கான நடவடிக்கையினை மொழிகள் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் எடு்த்திருந்தார். இதுதொடர்பாக அவர்   தனது முகப்புத்தக பக்கத்தில்  கூறியதாவது  என்னை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அறிவித்தபோது, அந்த...

மர்ம வாகனத்தில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் !

யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற  ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று...

ஆவா குழுவினரை நெருங்கிவிட்டோம்- பொலிசார்

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஓரிரு நாட்களுள் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட...

பொலிஸார் மீது வாள்வெட்டு : உரிமை கோரியது ‘ஆவா’ குழு

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர்...

நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை...

சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு ! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...

நாளை பல்கலைக்கழகங்களில் போராட்டம்- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்  போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர. அவர் மேலும்...

மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் சுட்டுள்ளனர் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கே.கே.எஸ் வீதி குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கொடூர சம்பவத்தினை நாங்கள் வன்மையாக...

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்து, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டு, பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு...

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் 5 பொலிசார் கைது.சி ஐ டி விசாரணை!

யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வுப்பிரிவின்  விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது சுமந்திரனுக்கு இரகசிய காதலா?- கஜேந்திரகுமார் கேள்வி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது சுமந்திரனுக்கு இரகசிய காதலா ? போற இடம் எல்லாம் எம்மைப் பற்றியே கதைச்சுக் கொண்டு திரியுறார்.பாவம் சுமந்திரன் இப்ப சரியா பதட்டபடுகிறார்.  என  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பனார்

சம்பந்தனை கொலை செய்வதற்கு 25 மில்லியனுக்கு கூலிப்படை!- பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறைப்பாடு

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு   ரூ  25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்    வடக்கு முதல்வர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு  மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது முறைப்பாட்டின் பிரதியை சனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளார்...

மாநகரசபை தொழிலாளர்களின் கோரிக்கைக்கு யாழ் பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு நிரந்தர நியமனம் வேண்டி யாழ் மாநகரசபை தொழிலாளிகள் கடந்த ஏழுநாட்களாக போராடிவருகின்றனர். இவர்களது இந்த போராட்டமானது சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நியாயமான தீர்வொன்றினை வழங்குவதற்கு மாநகரசபையும் மாகாணசபையும் இதய சுத்தியுடன் முன்வரவேண்டும் என எமது ஊழியர்சங்கம் விரும்புகின்றது. மாநகரசபையில் சுத்திகரிப்பு மற்றும் வேலைப்பகுதி ஆகியதுறைகளில் ஏழு...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கும் வரை இலங்கையர்களை தாயகம் அனுப்புவதை தவிர்க்கவேண்டும் : எச்சரித்தார் வடக்கு முதல்வர்

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்புவது சரியாக இருக்காது என  வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனிற்றா சொமறுகா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தில் இருந்து ஈழ அகதிகளை நாடுகடத்துவது தொடர்பிலேயே தமது விஜயத்தில் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக...
Loading posts...

All posts loaded

No more posts