Ad Widget

மதச்சார்பற்ற நாடாக இலங்கை மிளிரவேண்டும் ; சம்பந்தன்

இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதச் சார்பின்மையில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ள சமய புறக்கணிப்பு எதிர்காலத்தில்...

மாகாணசபை என அழைக்காது மாகாண அரசாங்கம் என அழையுங்கள்: சுமந்திரன்!

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்பட அழைப்பதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றய தினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
Ad Widget

நெடுந்தாரகை கப்பலின் முதல்ப்பயணம்! வடமாகாண சபையின் செயற்பாடுகளில் முக்கியமான ஒரு நிகழ்வு

நெடுந்தாரகை கப்பலின்முதல்ப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின்...

வட மாகாண சபை கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை!

வட மாகாண சபை அதிக அதிகாரங்களை கேட்கின்றது ஆனாலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத்...

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும் : அமைச்சர் பா.டெனீஸ்வரன்

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என வடமாகாண போக்குவரத்து கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ஜனாதிபதி

தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்- ”நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம்...

யாழ்ப்பாண மக்கள் நல்லிணக்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களாக வாழ்கின்றனர்

இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்கமானது கட்டாயமாக நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆனால் நாம் நல்லிணக்கம் என்று சொல்கின்றோம், பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் “நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் மக்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வில்...

வடக்கின் ஆரோக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் உலக உணவுத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பசிப்பிணிபோக்கும் மருத்துவனாக மிகப்பெரும் மனிதாபிமானப் பணியை உலக உணவுத் திட்டம் ஆற்றி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில், தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை குறைந்த ஒரு தொகையல்ல் இது வடக்கு...

ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது, புதிய அரசும் தேவையில்லை ; ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோடிய மகிந்த நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசாங்கம் அச்சமடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது....

அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டத்திலேயே 26 000 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள்

சமகால அரசாங்கத்தின் அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டத்திலேயே 26 000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுகொடுக்கும் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்திருப்பதாக பிரதமர் ரணில்விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். காலி கொக்கல முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கையுறை உற்பத்தி தொழிற்சாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் இங்கு உரையாற்றுகையில் இந்த விடயத்தை...

பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்

“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார். வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு...

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்

வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார். வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன்...

ஹம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை பற்றிய எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை: ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ...

ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தைஅழமாக ஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது...

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிறுவனங்கள் உதவ வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு நிறுவனங்கள் செய்யும் உதவிகள் இன்றியமையாததாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.ஒ.சி நிறுவனத்தின் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு பாசையூரில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் ஆரம்ப சுகாதார நிலையம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் உரையாற்றும் போது...

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

வடக்கிலுள்ள காணிகளை வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டும்

வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை குத்தைக்கு எடுத்து வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாணத்தின் தென்னை அபிவிருத்தி சபையின்...

வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் த.தே.கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஒத்துழைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்முனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்...

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்!

இயற்கை அனர்தங்களால் ஏற்படும் அநாவசிய உயிரிழப்புகள் மற்றும் உடமைச் சேதங்களை கட்டுபடுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேமேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2004ம் ஆண்டு ஏற்பட்ட...

பிள்ளைகளை இரக்கமுடையவர்களாக வளர்க்க வேண்டும்

இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வார்கள். இப்படியான உலகத்தில் வாழும் பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உடையவர்களாக வளர்க்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவோம். இவ்வாறு யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக் கொண்டார்....
Loading posts...

All posts loaded

No more posts