நேற்றய போட்டியில் கண்கலங்கிய மாலிங்க

செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 73...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : விம்மி விம்மி அழுதார் தாயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், ட்ரயல் அட் பார் முறையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நேற்றுத் திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையே விசாரணைக்கு...
Ad Widget

வடமாகாண கல்வியமைச்சர் பதவி விலகல் கடிதத்தை கட்சிக்கு அனுப்பினார்

வட மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமாச் செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி...

இலங்கை தோல்வி!! அரையிறுதியில் பாக்கிஸ்தான்!

செம்பியன்ஸ் டிராப்பி கிரிக்கட் தொடர் போட்டியில் நேற்றய ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கட்டுகளால் வெற்றிகொண்ட பாக்கிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில்...

சீனியின் சில்லறை விலை அதிகரிக்க மாட்டாது

சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும், அதற்கேற்றவாறு சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க மாட்டாது. இதனை சீனி இறக்குமதியாளர் சங்கம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் சீனியின் சில்லறை விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது. எவரேனும் போலியாக சீனியின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில்...

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்கள் நலனுக்காக முறையாக பயன்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

உரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மக்கள் நலன்கருதி முறையாக செலவளிப்பது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கில் அமுலாகும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி ஆராயும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வட...

வித்தியா கொலை சந்தேக நபா்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள்!

வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமனறத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வவுனியா மேல்...

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுவேன்: ஜனாதிபதி உறுதி

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் போனோரின் உறவுகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள்...

வடக்கில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பசுபதிபிள்ளை

எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்...

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின் தடை

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண...

இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பேரணி

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாச்சார...

எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவலுக்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவை குடம்பிகள் ஆய்வு தொடர்பான உதவியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிப்புக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இந்த...

கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013...

புங்குடுதீவு மாணவி படுகொலை தீர்ப்பாயம் கூடியுள்ளது

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...

நியாய விலையில் மணலை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நியாய விலையில் மணலைத்தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா? மலைக்கு விலையா?...

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி...

அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை : வடக்கு மாகாண சபையின் அடுத்த நடவடிக்கை என்ன?

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் டான் தொலைக்காட்சியில் நேற்றய தினம் ஒளிபரப்பாகிய அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி

இலங்கை, பாகிஸ்தான் பலப்பரீட்சை இன்று, மழை குறுக்கிட்டால் இலங்கை வெற்றி

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதும் தீர்மானம் மிக்க இறுதிக் கிரிக்கெட் போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது. இங்கிலாந்தின் காடீப் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் உபாதைக்குள்ளான திஸர பெரேரா இன்று களமிறங்குவார் என இலங்கை அணியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் போட்டித் தொடர் பட்டியலில் 7 ஆம் 8 ஆம் இடங்களில் உள்ள இரு அணிகளே...

யாழில் பெண்ணைத் தாக்கி பாரிய கொள்ளை

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற...

காலையில் திறக்கப்பட்ட கதவு பகல்வேளையில் மூடப்பட்டது

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
Loading posts...

All posts loaded

No more posts