Ad Widget

இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பேரணி

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில் அறநெறிக்கல்வி வாரம் சகல மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட செயலக இந்து கலாச்சார பிரிவினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நடைபவனியில் மாவட்ட மற்றம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினர்கள் இந்து சமய பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடை பவனியினைத் தொடர்ந்து கிருஸ்ணர் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட சின்மயா மிஸன் சுவாமிஜி அவர்களால் அறநெறிக்கல்வி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.

இதேவேளை இக்கொடிவார சிறப்பு நிகழ்வாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் நிதியினை வழங்கி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

Related Posts