அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : கிழக்கிற்கு மட்டும் தனியொரு சட்டமா?

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படாத வயதெல்லை கிழக்கில் மாத்திரம் ஏன் பிற்றப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல்வியமைச்சருக்கு பதிலாக அவரது பதிலை சபைக்கு தெரிவித்த காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பட்டதாரிகளை மாகாண சபைகள் ஆட்சேர்ப்பு செய்வதில்...

வடமாகாண சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி அடையாள உண்ணாவிரதம்!

வட.மாகாண சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தக் கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா, பிராந்திய சுகாதார நிலையம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம் 100 ஆவது நாளை...
Ad Widget

இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும்...

70ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் பல நிகழ்வுகள் ஏற்பாடு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை (12.08.2017) ஸ்ரீதேவி நடித்த ‘மம்’ திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல்...

நாளைய போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம்

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தினேஸ் சந்திமால் தலைமையிலான அணியில் உப்புல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்ஜலோ மெத்திவ்ஸ், லஹிரு திரிமான்னே, தனஞ்ஜய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லஹிரு குமார, விஸ்வ பெர்ணாண்டோ,...

பாலின் கொள்வனவு விலை ரூ72!!, 14 மாதங்கள் நான் பால் விற்பனை செய்தேன் : அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பாலின் கொள்வனவு விலையை 72 ரூபாக உயர்த்த வடமாகாண சபை முடிவெடுத்துள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 101ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூர் பால் உற்பத்தியினை ஊக்குவிக்கவும் , உள்ளூர்...

மாகாண சபைகளைக் கட்டுபடுத்தும் நாடாளுமன்ற சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் : சுரேஸ்

மாகாணசபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சட்டமூலம் இயற்றப்பட்டால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டுமென ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் வடக்குக் – கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவே மாகாணசபை கொண்டுவரப்பட்டது. ஜனநாயக விரோதமான முறையில்...

கன்னி உரையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம்!

அறிவுரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கி எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நாம் வெற்றியடைவோம். ஆனால், அபவிருத்தியை நோக்கிப் பயணிப்பதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இரண்டும் வடமாகாணசபையினால் சாதிக்கமுடியும். ஆனால் நாம் அதனைச் சாதிக்கத் தவறிவிட்டோம் என வடமாகாண சபை உறுப்பினராகப் பதவி ஏற்றுள்ள ஜெயசேகரம் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் சீமெந்து தொழிற்சாலை? : வடமாகாணசபையில் முரண்பட்ட விவாதம்

கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார். கட ந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
வடமாகாணசபையின் 101வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில்...

25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்

வடமாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நேர்முக தேர்வுமூலம் தெரிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரேயினால் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண உயர் அதிகாரிகள், தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத்...

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : யாழில் மங்கள

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை நாட்டின் ஜனநாயகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காங்கேசன்துறையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்....

தமிழ் வளர்க்கும் “கலைத்திரள்” : மலையத்திலிருந்து மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டி

ஊவா வெல்லச பல்கலைக் கழக மாணவர்கள் நாடாத்தும் "மலைத்தென்றல்" கலை கலாச்சார நிகழ்வின் ஓர் அங்கமாக "கலைத்திரள்" - அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டிகளை நாடாத்துகின்றனர். பாடசாலை ரீதியில் நடைபெறும் இந்தப்போட்டிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கான பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சானிற்தழ்கள் மலைத்தென்றல் நிகழ்வில் வழங்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்...

ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை!!

வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆவா குழுவினருக்கு நிதியளிக்கும் தனிநபர்களோ அல்லது குழுக்களையோ கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பினர் இக்குழுவினரோடு தொடர்பிலுள்ளார்களா...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய ஆகிய நான்கு மாகாணங்களில் இன்று(10) மாலை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களிலும் வானத்தில் மேகக் கூட்டம் நிறைந்து காணப்படும். சப்ரகமுவ, மத்திய, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன்...

செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனை செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது செஞ்சோலைப் பிள்ளைகளின் தேவைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவ்ரன் கேட்டறிந்து கொண்டார். வடமாகாண சபையின் 101வது அமர்வைப் பார்வையிட இன்றையதினம் வந்த சிறுவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமக்கான தேவைகள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர். கல்வி உதவிகள் மற்றும் கல்வி கற்பதற்கான...

வடக்கில் மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்களை அமைக்காதிருக்க நடவடிக்கை

வட மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகள் உருவாக்கப்பட கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி அமைச்சு எடுக்க வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வடமாகாண சபையின் 101வது அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, நீர்வேலி பகுதியில் மயனாம் ஒன்றை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள், மாகாண...

வடக்கில் மீண்டும் காலூன்றியது இலங்கை சுங்கம்

ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பல இடங்களில் அதன் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் காங்கேசன்துறையில் அதன் முதலாவது உப அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக...

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தெற்கிற்கு தப்பியோடும் ‘ஆவா’ தலைவர்கள்!

வடக்கில் நடத்தப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர், ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் தெற்கு பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பன பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் வடக்கில் பொலிஸார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில், அங்கிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts