Ad Widget

ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை!!

வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆவா குழுவினருக்கு நிதியளிக்கும் தனிநபர்களோ அல்லது குழுக்களையோ கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பினர் இக்குழுவினரோடு தொடர்பிலுள்ளார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்குழு தொடர்பாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு தனியான விசாரணையை முன்னெடுத்துள்ளது. இக்குழுக்கள் இயங்குவதற்கு காவல்துறையால் அனுமதியளிக்கமுடியாது.

அத்துடன் இதுவரை மு;னனெடுக்கப்பட்டுள்ள விசாரணையின்படி, மூன்று வாள்கள், ஒரு கத்தி, ஒரு உந்துருளி உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Posts