விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள்: அங்கஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் கல்விக்கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்....

திலீபன் நினைவுத் தூபி முன் ரயர் எரிப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸடிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர்கள் போடப்பட்டு தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும்...
Ad Widget

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு...

வடக்கில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்

மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப் பொருளில் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி இறுதி கால எல்லையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயமாக்கி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்...

யாழ் நகரில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் கிணறுகள் மூடப்படும் அபாயம்!!!

யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள சில கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் 100 இற்கு மேற்பட்ட கிணறுகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈகோலி என்னும் மலத்தொற்று கிருமி கிணறுகளில் கலந்துள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை போன்ற கரையூர் பிரதேச மக்கள் குடிதண்ணீர்...

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுதினத்தினை குழப்பிய நிதி நிறுவனம்!!

தமிழ்மக்களின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி திலீபனின் நினைவுதினம் நேற்று (15-09-2017) அவர் உயிர்நீத்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இடம்பெறும் அதே நேரத்தில் தூபிக்கு முன்னதாக நிதிநிறுவனமொன்று இந்த நிகழ்வை குழப்பும் வகையில் பாரிய சத்தத்துடன் பாடல்களையும் இசையையும் ஒலிபரப்பி இடையூறு விளைவித்துள்ளது....

ரஜினியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றத் தயார் : கமல்

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மக்கள் விரும்பினால் தாம் அரசியலுக்கு வரத் தயார் என்றும், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அத்துடன்,...

இலங்கை தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயற்பட்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இலங்கை அணிக்காக 9 டெஸ் போட்டிகளிலும் 44 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது

மருந்தை மாற்றிக்கொடுத்ததால் சிறுமி மரணம்

பெண்ணொருவர், தனது நான்கு வயது மகளுக்கு பிரிட்டோன் மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை மாற்றிக்கொடுத்ததால், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் கட்டைப்பரிச்சானை சேர்ந்த சிவகாந்தன் பிறெஸமி (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு தடிமல் ஏற்பட்டமையால், அவரது தாய், பிரிட்டோன் மருந்தை பருகக் கொடுத்துள்ளார்....

கிபீர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர். வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு...

கலைமதி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். புத்தூர் மேற்கு கலைமதி குடியிருப்பின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றக்கோரி பிரதேச மக்கள் நேற்றுடன் 66 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று காலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாகவும்,...

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு வவுனியா வளாக ஊழியர்கள் ஆதரவு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”யாழ்....

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல்...

பொலிஸார் பாராபட்சம்!

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு...

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் பிளவா?

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் குறித்த சட்டமூலம் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு...

2020 இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண சாரதி ஒருவரின் அடிப்படை சம்பளம் 28 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கும்...

இனந்தெரியாத காய்ச்சலினால் 11மாத குழந்தை உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11மாத குழந்தை ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கனிஸ்ரன் கிருஷ்ரவேலா தம்பதிகளின் 11 மாதக்குழந்தையான எஸ்தார் என்ற பெண்குழந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தயார் வழமையாக சிறுகுழந்தைகளுக்கு...

விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வடபிராந்திய பேருந்து உரிமையாளர்கள்!!

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகன எரியூட்டல் தொழில்நுட்பத்தை தற்பொழுது வடபிராந்திய பேருந்து ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக இலாபத்தினைப் பெறமுடிவதாக சம்மந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனியார் போக்குவரத்துத் துறையில் காணப்படும் போட்டித்தன்மைகளாலும் எரிபொருள் விலையேற்றங்களினாலும் குறுந்தூர மற்றும் நெடுந்தூர பேருந்து உரிமையாளர்கள்...

குப்பை சேகரிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபையின் அறிவித்தல்!

யாழ் மாநகர சபையினால் பொதுமக்களுக்கு குப்பை சேகரிப்பது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சபையினால் புதிதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின் பிரகாரம் குப்பை சேகரிக்கும் ரக்டர்கள் தங்கள் வீதிகளுக்கு சுழற்சிமுறையில் வருகைதர இருக்கின்றன. தங்களால் உருவாக்கப்பட்ட / உருவான குப்பைகளை உக்கக் கூடியன , உக்கமுடியாதன, இலத்திரனியல் கழிவுகள் என வேறுவேறாகத் தரம்பிரித்து குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts