Ad Widget

திலீபன் நினைவுத் தூபி முன் ரயர் எரிப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸடிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர்கள் போடப்பட்டு தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts