Ad Widget

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்துரையாடாது கிழக்குமாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசாங்கத்துக்கு ஒரு ஆதரவான போக்கை எடுத்தே கிழக்கு மாகாணத்தின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூடி அதில் தான் தீர்மானங்களை எடுக்கமுடியுமே தவிர, ஒரு சில மனிதர்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக முடிவெடுக்கமுடியாது.

இருப்பினும் கடந்த இரண்டரை வருடங்களாக ஒருசில மனிதர்கள் மாத்திரம் கையாண்ட விடயமானது, வெறுமனே தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.

ஆகவே அரசாங்கத்துக்கு ஒருபக்கம் முண்டுகொடுத்துக்கொண்டு, இன்னொருபக்கம் எமது காணியை விடுகிறார்கள் இல்லை, காணாமல்போனோருக்குத் தீர்வில்லை, அபிவிருத்தியில்லையென இரட்டைவேடம் போடமுடியாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts