- Saturday
- May 9th, 2026
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2 வார கால கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமைப் போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின்...
கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலின்போது 3 அசம்பாவிதங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அங்கொடையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து சர்தாபுர எனும் பகுதியிலும் மூதூர் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஆண்டான் குளம் பகுதியிலும் இனந்தெரியாத நபர்களது கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது. மேலும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இனந்தெரியாத நபர்களால்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என ஜானாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலார்கள் கூட்டாக தெரிவித்ததாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து மாணவ பிரதிநிதிகள் ஜானதிபதியை சந்திப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு வந்திருந்தனர். எனினும் ஜனாதிபதியை...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி. பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்....
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்காத யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “பயங்கரவாத மற்றும் அவசரகால சட்டத்தின்...
யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்....
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று...
பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதானது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களை பாதுகாப்பாக குடியேற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே சிவாஜிலிங்கம் இதனைக் கூறினார். அத்துடன்...
யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் பெற்றனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாகி திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து...
சோதனை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்தது. அரசாங்க தகவல் திணைக்களதில் இன்று பத்திரிகையாசிரியர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்க்குமிடையில் விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டது. அரசாங்க தகலவ் திணைக்கள பணிப்பாளர் நாலக்க கலுவெவ பாதுகாப்பு பிரிவினர் தற்போது தேசிய பாதுகாப்பினை...
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் சுமாா் 200 குழந்தைகள் தமது குடும்ப உறுப்பினா்களை இழந்துள்ளனா். என செஞ்சிலுவை சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார...
வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. எனினும் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து இடம்பெற்ற...
யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும்...
எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும்....
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா்...
பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று (புதன்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம் நாவாந்துறை பெரியபள்ளியில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ அல்லது சந்தேகநபர்கள் கைதோ இடம்பெறவில்லை. இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. “இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது” என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்....
அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உயிர்த்த்...
Loading posts...
All posts loaded
No more posts
