Ad Widget

யாழ். பள்ளிவாசலில் விசேட அதிரடிப்படை தேடுதல்!

யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று (புதன்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம் நாவாந்துறை பெரியபள்ளியில் இடம்பெற்றது.

இதன்போது, சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ அல்லது சந்தேகநபர்கள் கைதோ இடம்பெறவில்லை.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விசேட தேடுதல் நடவடிக்கைகளும் பாடசாலைகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அவ்வகையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கையின் பின்னர் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts