யாழில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளும், 76 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 11 ஆயிரம் குடும்பத்தினர் உட்பட 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கு 113...

நாம் விட்ட தவறுகளே இதற்கெல்லாம் காரணம் – விக்னேஸ்வரன்

இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய...
Ad Widget

இலங்கையின் 300 இணையத் தளங்கள் மீது விடுதலைப் புலிகள் பெயரில் தாக்குதல்!!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இலங்கையின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது இன்று காலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு தமிழீழம் சைபர் போர்ஸ் எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் கிரு ஊடகம், அமைச்சரவை அலுவலக குடியரசு...

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது!

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த அவர் இது ஒரு சாதகமான அறிகுறியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த...

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம்!!

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...

முள்ளிவாய்க்காலில் உறவுகள் அஞ்சலி! முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வாசிக்கப்பட்டது!!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் 11ஆம் ஆண்டு நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை அனுமதிக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். காலை 10 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது...

முன்னணியினர் 11 பேரின் தனிமைப்படுத்தல் கட்டளையை மீளப்பெற்றது நீதிமன்றம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு...

பொலிஸாரின் தடையை மீறி செம்மணியில் நினைவேந்தல் செய்தார் சிவாஜிலிங்கம்!!

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்.மன்னார் வீதியூடாக பயணித்த போது...

தனிமைப்படுத்தல் கட்டளையை மீளாய்வு செய்யுமாறு முன்னணியினர் நகர்த்தல் பத்திரம் அணைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து , மன்றிடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14...

செம்மணியில் நினைவேந்தல் நடத்தவும் விக்னேஸ்வரனுக்கு தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தார் ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற விக்கி சங்குப்பிட்டியில் ஒரு மணிநேர தடுத்து வைத்தலின் பின் திருப்பி அனுப்பப்பட்டார்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண...

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை எவரும் அனுஷ்டிக்க முடியாது- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவுரலை அனுஷ்டிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக...

மாவை, சரவணபவன் ஆகியோரின் நிகழ்வுகளுக்கும் தடை!

யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ....

மக்களை ஒன்று திரட்டி நிகழ்வுகளை நடத்தவும் முன்னணியினருக்கு நீதிமன்றம் தடை

நாடுமுழுவதும் அபாயகரமான கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதே இந்தக் கட்டளையை நீதிமன்றம் ஆக்கியுள்ளது. மனுவில் தமிழ்...

நினைவேந்தல் நடத்தியதால் முன்னணியின் தலைவர் உள்பட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நீதிமன்றம் உத்தரவு!!

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த...

யாழ்.பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் உறவுகளுக்கு நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத்...

பருத்தித்துறையில் இராணுத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்

பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -23) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மூன்றாம் நாள் அஞ்சலி நாகர்கோவிலில்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது. 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின். குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர்...

அரசாங்கத்தின் சௌபாக்கியா வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் – யாழ் மாவட்டம்

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் பத்து இலட்சம் வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்ட விதைப்பொதிகள் வழங்குதல்' நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றது. யாழ்.மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் 14500 நாற்று விதைப் பைக்கட்களும் மாகாண...
Loading posts...

All posts loaded

No more posts