எண்ணெய் கசிவு விழிப்புணர்வு கருத்தரங்கு

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது. அளவெட்டி, மல்லாகம், கட்டுவன், இளவாலை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர். தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி...

குப்பைகளை அகற்ற பணம் அறவிடும் யாழ்.மாநகர சபை : மக்கள் விசனம்

நீண்ட காலமாக குறிப்பிட்ட குப்பைகள் மாத்திரம் ஏற்றிவிட்டு ஏனையவற்றை வீதியிலேயே விட்டுவிட்டு செல்லும் யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக யாழ்.கச்சேரி, சுவாட்ஸ் லேன் வீதியிலுள்ள குறிப்பிட்ட குப்பைகளை மாத்திரம் அகற்றிவிட்டு வாழைத் தண்டுகள், மரக்குற்றிகள் போன்றவற்றை ஏற்றுவதற்காக மக்களிடம் ஒரு தொகைப் பணத்தை கேட்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....
Ad Widget

அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்

'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...

தொலைபேசி மூலம் வந்த திருடன் !

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...

பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணில் காலடி வைத்தார்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பாரியார், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்...

மஹிந்தவின் தோல்வியால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வி அடைந்திருப்பதால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வி அடைந்தது கண்டு மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும்...

தாயையும் மகளையையும் காணவில்லை

யாழ்ப்பாணம், கற்கோவளம், தபால்பெட்டி சந்தியைச் சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ்...

ஊழியர் சேமலாபநிதியில் 87 நிறுவனங்கள் பதிவு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...

விபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது....

புதிய அரசின் நூறு நாள் திட்டத்தை வெளியில் இருந்து ஆதரிப்போம் – ஈபிடீபி

புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை வெளியில் இருந்தே ஆதரிப்பதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்திருக்கின்றது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலும் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். தமிழ்...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள்...

அமெரிக்க மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் தளம் ஊடுருவல்

அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இணைய காலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும், ராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய...

விஜய், அஜித் ரசிகர்களிடையே சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்!

சமூக வலைத்தளங்களில் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போது ஒரே பிரச்சனை தான். தலயா? தளபதியா? என்பது தான். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தின் ட்ரைலர் வெளிவர, பிரச்சனை மீண்டும் அவர்களுக்கிடையே பூதாகரமானது. சிவகார்த்திகேயன் ட்ரைலரில் அஜித் வசனத்தை கூற, உடனே விஜய் ரசிகர்கள் கோபமாகிவிட்டனர்....

ஐ – பெயர்தான் சிறிசு, படம் ரொம்பப் பெரிசு

ஜனவரி 14 ஐ வெளியாகிறது. திரையுலகமும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த படம். விக்ரமின் கடின உழைப்பும், ஷங்கரின் பிரமாண்ட கற்பனையும், ரஹ்மானின் இசையும், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கோடிகளும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பொதுவாக இரண்டரை மணி நேரம் படம் இருந்தாலே பார்வையாளர்கள் நெடியத் தொடங்குவார்கள். இரண்டே முக்கால் மணி நேரம் என்பது மிக...

சம்பந்தன் குழுவால் பல கோரிக்கைகள் முன்வைப்பு!

ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பின் போது, தேசிய...

புதிய அமைச்சரவை

இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. 1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம் 4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் 5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு...

எதிரிக்கும் துரோகிக்கும் வாக்குரிமை மூலம் செய்தி கூறியுள்ளோம்

தமிழ் மக்களின் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாகரஞ்சினி ஐங்கரன் திங்கட்கிழமை (12) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

முல்லைத்தீவில் புலிகளுக்கு சார்பான துண்டுப்பிரசுரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 'வடக்கில் எமக்கு புதிய சூரியன்' எனும் தலைப்பிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரங்களில் விடுதலைப் புலிகள் இயங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாத்திரமே பொறிக்கப்பட்டிருப்பததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு...

பாப்பரசர் வருகை: அரச விடுமுறை

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?

மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...
Loading posts...

All posts loaded

No more posts