Ad Widget

சிரமதானத்தில் ஈடுப்பட்ட யாழ். பொலிஸார்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 கிராம அலுவலர்ககள் பிரிவுகளில் சிரமதானப் பணிகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (07) முன்னெடுத்தனர். ஜே- 81, 84, 86 மற்றும் 87 ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை இந்த சிரமதான பணிகளில் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். கடந்த வாரத்தில்...

காஸ் விலையும் குறைப்பு

இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
Ad Widget

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது

முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை, வரணியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். குறித்த யுவதி...

சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான்; தீர்வு விரைவில் என்கிறார் புதிய கட்டளைத்தளபதி

சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று...

கால்நடைகளின் கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு தீவிரம்

யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது...

பிழையான சிந்தனைகளை மாற்றி வடக்கு மாகாணத்தை பாதுகாப்போம்!

வடக்கு மாகாணம் இதுரைகாலம் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன சனிக்கிழமை திறந்து...

தொடர் வழக்குகள்: ரஜினியின் லிங்கா படம் 12–ந்தேதி ரிலீசாகுமா?

ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரஜினி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 3500 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வருகிறது. தணிக்கை குழுவுக்கு சமீபத்தில் படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும்...

அஜித்துடன் அப்படி நடிக்கவேண்டும் என்று அவசியமில்லை! சூரி

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் நடிக்க விரும்பும் நடிகர் அஜித். ஆனால், சமீபத்தில் காமெடி நடிகர் சூரி கூறியிருப்பது ஆச்சரியத்தை வரவைத்துள்ளது. இதில் முதலில் வீரம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க சூரியிடம் தான் பேச்சு வார்த்த நடந்ததாம். அதில் ஒரு காட்சியில் அஜித்திடம் வம்பு செய்வது போல் வருவதால், நான் அஜித்துடன்...

எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒருலீற்றர் 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 165 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒருலீற்றர் 158 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புலம்பெயர்ந்தவர்கள் முன்வாருங்கள்’

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சனிக்கிழமை (06) கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது வட மாகாணசபை...

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு என்பதை வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்’

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுடன் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மருதனார் மடம்...

மகிந்த சிந்தனையில் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாரில் தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மகிந்தோதய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனொரு அங்கமாக குறித்த திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸாரில்...

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட செயலகத்தினால் உதவிகள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அடை மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும்...

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் யாழ். மாணவன் பங்கேற்பு

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இலங்கை பல்கலைக்கழக வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட மாணவன் எம்.என்.சித்திக் உள்ளடங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி அலகு பணிப்பாளர் கே.கணேசநாதன் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார். உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை (05) தொடக்கம் எதிர்வரும் 8 ஆம்...

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த றொஹான் டயஸ், நேற்று வெள்ளிக்கிழமை (05) முதல் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, கொழும்பு தலைமை பொலிஸ் திணைக்களத்தில்...

ஜனாதிபதி ஆலோசகராக அஸ்வர் நியமனம்

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7 ரூபாயினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது....

தேசிய அரசாங்கமே சிறுபான்மையினர் பிரச்சினையை ஆராயும்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை...

தொடரும் கத்தியின் வெற்றி!

கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. இப்படம் வெளிவந்த 12 நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்தது.சமீபத்தில் தான் இப்படத்திற்கு பாசிட்டிவாக லைகா பெயரை இனி பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது வரை பல இடங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.இதுவரை வசூல் சுமார் ரூ 125...
Loading posts...

All posts loaded

No more posts