- Saturday
- May 18th, 2024
நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிட்கப்பட்ட இருவர் மாத்திரம் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானம் ஒரு திரைப்பட இயக்குநர் ஒருவருக்குச் சொந்தமானதென தெரியவந்துள்ளது. விமானம் மீட்கப்பட்ட பின், குறித்த திரைப்பட இயக்குநர் மீட்கப்பட்டது தன்னுடைய விமானம் என ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும்...
பாரிசிஸ் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிசில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு முதல் முறையாகக் கூடிய அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 17 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரெஞ்சு தேசிய...
விருமாண்டியில் நடித்த பிறகு காணாமல் போன அபிராமியை கமல்தான் விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச மீண்டும் அழைத்து வந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அபிராமிக்கு செமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. மலையாளத்தில் சுரேஷ்கோபியின் மனைவியாக அப்போதகரே படத்தில் நடித்தவர் தற்போது மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின்...
திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண்மணியனை மணக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதனை திரிஷாவே டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ந்தேதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து பிரத்யேக...
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர். காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா...
ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை வெளியாட்கள் பயன்படுத்திவருகின்றமை குறித்து வெளியான தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக மீளப்பெறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்...
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (13) மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த மகாராசா துஷாந்தன் (வயது 20), ஸ்ரீகரன் ஸ்ரீசங்கர் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு...
புனித பாப்பரசர் பிரான்சிஸின் வருகையையொட்டி நாளை புதன்கிழமை(14) பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த விடுமுறையை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் ஆணையாளர் ஹேரத் யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் கொலை வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படி மேலதிக விசாரணைக்காக நேற்று யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. பொன் அணிகளின் போர் கிரிக்கெட் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இவர் துடுப்பாட்ட...
காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துங்கள் என்று கூறியதுடன் தேர்தல் நாளை குறித்து கொடுத்தும் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தது,...
வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த 2014 வருடத்தில் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் ரீ.விஸ்பரூபன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான சமூக, கலாச்சார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாது இளைஞர்கள் தவறான வழியில் செல்வதனால் அவர்களுக்குரிய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றது....
ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில்...
வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தால் இளைஞர், யுவதிகளுக்கான விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் காரைநகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் நிர்வாக தலைவர் பி.யோ.சுந்தரேசன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் வளர்ச்சியானது...
தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது. அளவெட்டி, மல்லாகம், கட்டுவன், இளவாலை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர். தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி...
நீண்ட காலமாக குறிப்பிட்ட குப்பைகள் மாத்திரம் ஏற்றிவிட்டு ஏனையவற்றை வீதியிலேயே விட்டுவிட்டு செல்லும் யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக யாழ்.கச்சேரி, சுவாட்ஸ் லேன் வீதியிலுள்ள குறிப்பிட்ட குப்பைகளை மாத்திரம் அகற்றிவிட்டு வாழைத் தண்டுகள், மரக்குற்றிகள் போன்றவற்றை ஏற்றுவதற்காக மக்களிடம் ஒரு தொகைப் பணத்தை கேட்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....
'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...
யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பாரியார், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்...
Loading posts...
All posts loaded
No more posts