Ad Widget

யாழில் ஜே.வி.பியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்துவைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) யாழ் மாவட்டத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வில் திறந்துவைக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மங்கள விளக்கை இராமலிங்கம் சந்திரசேகரம், விமல் ரட்ணாயக்கா, யாழ்ப்பாணம் தொகுதி அமைப்பாளர் அ.கணபதிப்பிள்ளை உட்பட பலர் ஏற்றினார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்கா கட்டடத்தை நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

Related Posts