தமிழக மக்களுக்கு உதவும் வட மாகாணசபையின் ஆர்வத்துக்கு இந்தியத் துணைத்தூதுவர் நன்றி!

தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத்...

அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு

அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php
Ad Widget

வெள்ள அனர்த்த முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன

'யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால பயனுடைய அனர்த்த தவிர்ப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும்' என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...

முல்லைத்தீவில் படையினர் வசமாக 13,487 ஏக்கர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல், படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்ள நிலங்களில், காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக்காணிகளாக, 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1983ஆம் ஆண்டு...

வடக்கில் மீள்குடியேற்றத்தை ஆராய அதிகாரிகள் மட்டத்திலான குழு – ஜனாதிபதி

வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும்...

ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும்வரை ஓயமாட்டோம் – ஒபாமா

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக்கும், அவரது பாகிஸ்தான் மனைவி தஷ்ஃபீன் மாலிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் சம்பவமாக...

பொலித்தீன் பாவனை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே அதனை அமுலாக்க ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். பொலித்தீனால் ஏற்படும் சுற்றுச்...

சாதாரண தர பரீட்சை : கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை

2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக...

சென்னை மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் ஈழ அகதிகள்

தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர். சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு,...

ஊக்கமருந்து பயன்பாடு: கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அண்மையில், பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தின் போது, காலக்கிரமமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதாக, இலங்கை கிரிக்கட்...

தமிழக அரசை குறை கூறினேனா? – கமல்ஹாசன் விளக்கம்

சமீபத்தில் கமல் இணையதளம் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு எதிராக பேட்டியளித்ததாக வெளிவந்த செய்தி மற்றும் அந்த பேட்டியளித்த கமலை கண்டித்து அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் விதமாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று? என்று நான் கேள்வி எழுப்பியதுபோல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு...

பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்லாமல் பேராசைக்காரகளால் நிவாரணப்பொருட்கள் சூரை: நடிகர் சித்தார்த்

சென்னை நகரம் முதல் மழையால் பாதிக்கப்பட்ட போதை நடிகர் சித்தார்த் வட இந்திய ஊடகங்களை விமர்சித்தது ஒளரவிற்கு நிலைமையை அவர்களுக்கு புரிய வைத்தது என்றே தோன்றுகிறது. தற்போது இரண்டாவது முறையாக சென்னை கனமழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களிடையே உதவிகளை செய்து...

கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

இந்திய அணி அபார வெற்றி!

4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 117.5 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 127 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட்...

20 மாணவர்களுக்கு HIV : பல்கலை அனுமதியின்போது மாணவர்களுக்கு HIV பரிசோதனை!

பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது...

வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம், எதிர்க்கக்கூடாது! – சம்பந்தன்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக்...

திருகோணமலைக் கடலில் சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களுடைய சடலங்கள் ?

திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு...

உலக்கையால் அடி வாங்கிய பொலிஸார்!

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச்...

விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!

சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts