- Monday
- April 29th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...
யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14...
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ...
யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட...
யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி எரித்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை...
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது. அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள்,...
யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது. இதனிடையே தமக்கான ஊதியத்தை பெற்றுக்கொள்ள துணைவேந்தர்,பீடாதிபதிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் பல்கலைக்கழக நிதியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகள் கோரப்பட்டுள்ளது. கல்வி சாரா...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்...
தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக...
யாழ் பல்கலைக்கழக ஊழியர்சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம்.. 09.03.2018 UEU/2017-2018/022 பத்திரிகைக் குறிப்பு (09.03.2018) இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார். இந்நிலையில், குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மாணவனின் உடலை கண்டெடுக்கப்பட்டது....
நேற்று (20-02-2018) இடம்பெற்ற ஊழியர்சங்க பொதுக்கூட்டத்தில் எமது கோரிக்கைக்கு அமைவாக நேர்முகத் தேர்வானது ஒத்திவைக்கப்படாது குறித்த தினங்களில் (21, 22 பெப்ரவரி 2018) நடாத்தப்படுமானால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. நேற்று மாலை வரை யாழ் பல்கலை நிர்வாகத்தினால் எந்தவித சாதகமான பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக எமது கோரிக்கையினைப் புறந்தள்ளி நேர்முகத்தேர்வுகளை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்....
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவன் மீது பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த மோதல் சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும் முன்னதாக பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். அது தொடர்பில் தெரிய வருவதாவது, சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின...
யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து...
Loading posts...
All posts loaded
No more posts