யாழ்.பல்கலை வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் மொட்டையடிப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர். சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம்...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 1706 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர். மேலும் இதன்போது சகல...
Ad Widget

பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: 3 பொலிஸாரை விடுவிக்க பணிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது. அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது....

யாழ் பல்கலைக்கழத்தில் மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள்

“மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6“ நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வில் தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கான முதல் தற்­கொ­டை­யா­ளர் தியாகி பொன்­னுத்­துரை சிவ­கு­மா­ர­னுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ்.பல்கலையில் கலந்துரையாடல்!

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெற்றது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம் ஆகியன இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தியது. அடையாளம் அமைப்பால் இது...

யாழ். பல்கலை சமூகம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதிவேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட்...

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி – பல்கலை. மாணவர்கள் அழைப்பு

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...

யாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு மனவருத்தமளிக்கிறது – முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு...

நினைவேந்தல் நிகழ்வில் முதல்வருடன் இணைய பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்....

வட. மாகாண சபையின் அறிவிப்பு வேதனையளிக்கிறது: யாழ். பல்கலை சமூகம்

முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி...

யாழ். பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை?

யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன....

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்!

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...

யாழ் பல்கலைக்கழகத்தில் மே தினம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎நேற்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர்...

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவாலயம் அமைக்க தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...

புத்தர் சிலை விவகாரம்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி...

தடைகளைத் தாண்டி யாழில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...

யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு

யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14...

யாழ். பல்கலையில் தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆவது நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ...

தொடர் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட...

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி எரித்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை...
Loading posts...

All posts loaded

No more posts