முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு திடீர் சுகயீனம்!

திடீர் சுகயீனம் காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் திடீர் சுகயீனம் அடைந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அவசியம் தேவை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சில நாள்கள் போதனா வைத்தியசாலையில்...

ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்

வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. 105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு...
Ad Widget

சிறுநீரக நோயாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால்...

கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியமைக்கு ஆதாரங்கள் கிடைத்தன

இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்தின் மூலம் உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். 'கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதார பூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில்...

அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் உன்னத தினம்

சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு...

இஸ்லாம் காட்டும் தாராளத்தன்மை தேசிய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரி!

முஸ்லிம்களின் ஆன்மீக கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு போன்றே சமத்துவத்துக்கு வழிகாட்டும் அவர்களது தாராளத்தன்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தலைப்பிறையினைக் கண்ட பின்பு கொண்டாடும்...

அனுமதிப் பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைப்பு

இவ் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவரவர் முகவரிக்கும் இவ்வாறு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உரிய தினத்துக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள்...

பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் வடமாகாண பட்டதாரிகள் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'பட்டதாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைவாய்ப்பை கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்தி...

காதல் விவகாரம் : இலங்கை அகதியான இளம் யுவதியை கழுத்தறுத்து கொல்ல முயற்சி

தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் அவரது தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை ஊர்காவற்றுறை நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மேலும் நீடித்துள்ளது. மாணவி வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோரது விளக்கமறியலே...

குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான 40 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருகநர் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வின்...

யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஸ்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இன்று யூலை ஐந்தாம் திகதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016...

யாழ். பல்கலைக்கழக விடுதியில் கரும்புலிகள் தின சுவரொட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (July 05) நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்’ எனத் தலையங்கமிடப்பட்டு, ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் திணைக்களத்திற்கு ஓதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் வகையில் நேற்று திங்கள் கிழமை நில அளவை மேற்கொள்ளும் முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி உதயநகர் மேற்கில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுமார் நான்கு ஏக்கர் பொதுக் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு...

என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள்

என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில்...

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! மக்ஸ்வல் பரணகம

2010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. எனவே இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம்...

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகு மீன்பிடிக்கு அனுமதி!

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லையென இந்திய இலங்கை மீனவர்களின் நலன் பேணல் மன்றத்தின் இலங்கை ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இந்திய...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியாம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. நேற்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை...

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி...

இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி, திங்கட்கிழமை (04) தெரிவித்தார். தொண்டைமானாறு, அக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts