Ad Widget

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு அடுத்த வாரம் முதல் தடை

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119னுக்கோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts