வலி.வடக்கில் மக்களை மீளக்குடியேற்றியதாக போலியான படம் காட்டுகிறது அரசு! சுரேஸ் பிரேமச்சந்திரன்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு...

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி ; யாழ்ப்பாணத்தில் பேரணி

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பேரணியில் மாணவர்கள், பொது...
Ad Widget

குடும்பஸ்தரை காணவில்லை! பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்றனரா??

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் நேற்று நள்ளிரவு முதல் காணாமல் போயுள்ளார். இவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனது கணவருக்கு தொடர்ச்சியாக விடுத்துவந்த அச்சறுத்தல் காரணமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்...

உருமறைப்புச் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

அண்மையில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றப்படாது அச்சோதனைச்சாவடியை மறைமுகமான ஓர் இடத்தில் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உருமறைப்புச் செய்யப்பட்ட சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் பயணிக்கும் மக்களைக் கண்காணிப்பதுடன், அவ்வீதியால்...

சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆடம்பரவீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இரா.சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடனும்கூடிய 3 வீடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் தனக்குப் பொருத்தமானதாக அமையவில்லையென மறுத்துவிட்டார். ஆனால், இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொண்டு அவருக்கு நிலத்துடன் அமைந்துள்ள வீடொன்றைப் பார்த்துவருவதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகையால்...

மாணவன் பலி: வானின் கதவைத்திறந்த சாரதி கைது

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வேனின் கதவைத் திறந்த வானின் சாரதியை, நேற்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் குறித்த சாரதியை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

புனர்வாழ்வு பெற்ற ஐந்து பேர் விடுதலை

வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார். இதன்போது, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தனது...

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்புக்கு இலங்கையில் இடமேயில்லை! ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு பதில்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பை நிராகரிக்கும் அரசு, உள்நாட்டு நீதிக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும், இது தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டது. இலங்கை மீது குற்றச்சாட்டுக்களைச் முன்வைக்கலாம். ஆனால், இலங்கையின் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் சட்டரீதியான முறைமை சர்வதேசத்திற்கு இல்லை என்றும் அரசு...

இலங்கை வருகிறார் பான் கீ மூன்!

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜெனிவாவில் நேற்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32 ஆவது கூட்டத் தொடரின் பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போதே ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருகை...

பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல்...

அனைத்து பீடைக்கொல்லிகளினதும் இறக்குமதி, விற்பனையை தடைசெய்யவும்!

சகல வகைகளையும் சேர்ந்த முழுமையான பீடைக்கொல்லிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நச்சுத்தன்மையற்ற உணவுகளைப் பெற்றுக்கொடுத்து நாட்டு மக்களை சுகதேகிகளாக ஆக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பீடைக்கொல்லி, கிருமிநாசினி...

இலங்கையில் இருப்பது சட்டத்தின் ஆட்சி; இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது

இலங்கை அரசு நல்லிணக்கத்தை எட்டுவதில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கடந்த ஆண்டு தீர்மானத்தை...

யாழில் இராணுவத்தின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று (29) காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

. பனங்காட்டில் புத்தி கூர்மை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இப் ´புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி´ இன்றும் நாளையும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த...

வித்தியா படுகொலை வழக்கு; மேலும் ஒரு சாட்சியாளரை மன்றில் ஆஜர்படுத்த முடிவு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தில் மேலும் முக்கிய சாட்சி ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பெருங்குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி நிசாந்த சில்வா மன்றிற்கு தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த மக்கள் தற்போது நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தகவல்களை தந்துதவுமாறு மன்று கேட்டுள்ளது. மாணவி வித்தியா படுகொலை...

கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள்!!

புதிய ஆய்வுகளின் மூலம் கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள் தொடர்பில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளது.கைபேசி மூலம் நமக்கெல்லாம் வரும் பாரிய 'ஒரு பாதிப்பை' பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் கைபேசியை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம். அதென்ன பாதிப்பு..? கைபேசியினால் வரும் பாரிய பாதிப்புகள் இவைகள் தான்..உறங்கும்போது கைபேசியை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு...

‘வந்தேறு குடிகளுக்கு வர்தகமையமா?’ கலவரங்களை தூண்டும்வகையில் துண்டுபிரசும்!!

வவுனியா சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை துண்டுப்பிரசுரம் ஒன்று சகல கடைகளிலும் ஒட்டப்பட்டும் சில பகுதிகளில் வீசப்பட்டும் காணப்படுகிறது இதில் வந்தேறு குடிகளுக்கு வர்தகமையமா?என்ற தலையங்கத்திலேய அச்சிடப்பட்டுள்ளது பொருளாதார வர்த்தக மையம் அமைவது தொடர்பில் வவுனியாவில் கடும் சர்ச்சைகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதை மையமாக கொண்டு கலவரத்தையும் சாதி பிரச்சினையையும் தூண்டும் விதமாக விஷமிகளால் இவ்வாறான...

விடுவிக்கப்பட்ட காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கு உதவுமாறு கோரிக்கை

மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர்,...

பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு நீதிமன்றத்தால் அபராதமும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தலின்றி சுருட்டு விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்குத் தலா-250 ரூபா வீதம் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரி. கருணாகரன் நேற்று தீர்ப்பளித்து...

நாங்கள் மாகாணசபையைக் குழப்பவில்லை: நான்கு உறுப்பினர்கள் சம்பந்தனுக்கு தன்னிலை விளக்கக் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் சபையினைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதில் ஒரு உறுப்பினரை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த உறுப்பினர் அல்லாத நான்கு உறுப்பினர்களினால் கை ஒப்பம் இடப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்று...

விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது. பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட...
Loading posts...

All posts loaded

No more posts