மாணவர் ஒன்றியத் தலைவர் பிணையில் விடுதலை

யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவனின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்நேரமும் கைதாகலாம்!! சுமந்திரன்

யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நேற்றிரவு வரை எவரும் கைதுசெய்யப்பட்டாத அதேநேரம் எந்நேரமும் மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட...
Ad Widget

மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், தமிழ் சிங்கள மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக சம்பவம் மஹிந்த அணியினரின் தூண்டுதலில் நடந்திருக்கலாம்! சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆட்சியிலிருந்து மக்களால் விரட்டப்பட்டவர்கள் தூண்டியிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார். கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

தமிழ் மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சுவாமிநாதனின் கருத்தால் மாணவர்களிடையே குழப்பம்!

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தையடுத்து இன்று (புதன்கிழமை) பல்கலைக்கழகம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே உருவாகிய மோதல் சம்பவத்தையடுத்து, மீண்டும் மோதல் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷன...

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி இல்லை!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக...

‘இணையத்தள அடிமைகளும் மனநோயாளர்களே’

'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...

யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் யாழ். பல்கலைக்ககழகத்தின் அனைத்துப் பீடங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் இயங்கவில்லை. இந்நிலையில் விஞ்ஞானபீடம், கலை, வணிக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும்...

தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்குக! ஜனாதிபதிக்கு சம்பந்தன் வலியுறுத்து!!

"தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.சுமார் 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசின் உதவியில்கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

விடுவிக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்தியது பொலிஸ்!

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...

ஆஸ்திரேலியாவில் ஈழத்தமிழ் அகதி சடலமாக மீட்பு!

மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில்...

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு; முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என். எம். அமீன்

ஊடகத்துடன் புதிதாக இணைந்திருக்கின்ற சமூக ஊடகங்கள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும். சமூக ஊடகங்கள் இன்று சமூகத்தின் மத்தியிலே பெரும் செல்வாக்கை ப் பெற்றிருக்கின்றன. இதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது என்பது பற்றி குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் விழிப்பாக இருப்பது அவசியமாகும் என்று முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என். எம். அமீன் கூறியுள்ளார்....

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , தேர் இழுக்க தொடங்கியதும் தமது மேலாடைகளை கலைந்து விட்டு , தமது காலணிகளை கழட்டி விட்டு தாமும் பக்கதர்களுடன் இணைந்து தேரினை இழுத்தனர்.

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் எச்சரிக்கை!!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப்போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் இடம்பெறக்கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் பேராசிரியர் மெகான் டி சில்வா. இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கலைப்பீட மாணவர்கள்தான் மோதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள்...

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு : சி.வி. சம்மந்தனின் நிலைப்பாட்டை அவதானிக்கின்றோம்

யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது . சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் . ஆனால் தமிழ் தலைமைகளும் பல்கலைக்கழகமும் இன்னும் மாறாதது போன்றே தோன்றுகின்றது . சி.வி விக்கினேஸ்வரன் மற்றும்...

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் திணைக்களத்தினால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த 2500ரூபா வேதன...

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது!

உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போதுகூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைதிப்பூங்காவாக செயற்பட்டது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த, நல்லாட்சி அரசாங்கம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமாகும். இதனை திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாக ஏற்பட்ட குழப்பம் என்றே...

யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில்...
Loading posts...

All posts loaded

No more posts