- Wednesday
- May 6th, 2026
மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் எதிரி இரத்தினம் ஆனந்தராஜாவை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில் பணியாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார...
நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வைக் காண்பதற்கு நாம் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடத்தில் தெரிவித்துள்ளார். எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவரிடத்தில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித்தலைவர்...
எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னை வியக்கவைத்துவிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்து சூளுரைத்தார். பொதுமக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் கொள்கையில் நல்லாட்சிஅரசாங்கம் வற் வரியைஅதிகரித்தது. தேர்தலின் போதுவழங்கியவாக்குறுதிகள் மாயமாகிவிட்டுள்ளன எனவும்...
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது. 'அக்சஸ் யு.கே.' என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனான குறுகிய படிவம், எடுத்துச் செல்லக்கூடிய நட்புறவான முறைமை, அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய...
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், நோயாளர்களை மருத்துவமனைக்குக்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்படி யாழ்.பல்கலைக்கழகத்திற்கான நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசார ஊழியர்கள்...
மன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு...
வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ்...
வடக்கு கிழக்கு மக்களுக்கும் பாரிய நன்மையினை ஈட்டித் தரத்தக்கதான மொரகஹகந்த - களுகங்கை நீர் விநியோகத் திட்டமானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அந்த வகையில், இத் திட்டத்தை தனது மிக முக்கியக் கனவாகக் கொண்டு, அதனை நனவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக ஈழ மக்கள்...
தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாதென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ”போரானது எம்மை...
அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன ஒற்றுமையை பாதிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையை தோற்றடிக்க செய்ய வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி...
வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது குறித்து கிராமிய...
மற்றுமோரு வழக்குத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளார். நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். கவர்ஸ் கோர்பிரேசன் என்ற நிறுவனத்தின் தலைவராகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ ஹலோ...
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மாபெரும் நடைபவனி சற்றுமுன் கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. [caption id="attachment_67786" align="aligncenter" width="660"] ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.[/caption] முன்னர்...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன், இன்று (வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது, இலங்கை அரசாங்கத்தின பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து கேட்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசனையும் கனேடிய அமைச்சர்...
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச்...
பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில்...
திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று அநுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு...
Loading posts...
All posts loaded
No more posts
