கீரிமலையில் மீன்படி துறைமுகம் அமைக்கும் திட்டம் இல்லை

கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும்...

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்

யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி...
Ad Widget

வலி. வடக்கு கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா? அறிக்கை சம்ப்பிக்குமாறு உத்தரவு

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார். கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால்...

வடக்கில் அதிகளவிலான இராணுவம்; சமாதானத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்

வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய ஒன்றிய,...

உழவு இயந்திரம் மோதி சிறுவர்கள் படுகாயம்

சாவகச்சேரி, பெருக்குளம் சந்தியில் சைக்கிளில் சென்றவர்களை உழவு இயந்திரம், புதன்கிழமை (03) மாலை மோதியதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நேற்று தெரிவித்தனர். சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயரூபன் சாரூஜன் (வயது 6), ஜெயரூபன் அஸ்வின் (வயது 1) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். தந்தையுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, உழவு இயந்திரம்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றம், இன்று வௌ்ளிக்கிழமை (05) மரண தண்டனை விதித்தது. 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, வென்ஷர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்தார்கள் உள்ளிட்ட...

தமிழினியின் புத்தகம் மூலம் பெறப்பட்ட வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியினால் எழுதப்பட்ட ´ஒரு கூர்வாளின் நிழல்´ என்ற நூல் விற்பனை மூலம் பெறப்பட்ட 3,00,000 ரூபாய் வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு இன்று வௌ்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது. குறித்த பணத்தொகையை வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வில் தமிழினியின் கணவர் எஸ்...

காரைநகரில் பஸ் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. காரைநகர் வலந்தலைச் சந்தியிலிருந்து களபூமி வழியாக துறைமுகம் செல்லும் பாதையில் (786இலக்கம்) ஊரி பிட்டியோலைக்கு திரும்புகின்ற சந்திக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தினால் சங்கானை தேவாலய வீதியைச்...

யாழில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார். இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில்...

கடமைக்கு வராவிட்டால் வேலை பறிபோகும்-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

தேசிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், சகல ஊழியர்களும் இன்று கடமைகளுக்கு திரும்புமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல கல்வி சாரா ஊழியர்களையும் விசேட அறிவித்தல் மூலம் கேட்டுள்ளது. இன்று  கடமைக்கு சமூகம் தராத தகுதிகாண் மற்றும் பயிற்சி ஊழியர்கள் சகலரும் தங்களது தொழில்களிலிருந்து...

முன்னாள் போராளிகள் பரிசோதனைக்குத் தயார்!

னர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வரும் நிலையில், இதுகுறித்த சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கம் இதுகுறித்து உடற்கூற்று பரிசோதனை நடத்துவதற்கு தயாரென தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 800 போராளிகள் தயாராக உள்ளனரெனவும், அரசாங்கம் உடன் இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனநாயக...

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு எதிராக மல்லாகத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரத்தை வழிமறித்து இவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புகையிரத கடவையில் சமீஞ்சை விளக்குகளும் சமீஞ்சை ஒலியும்...

பளையில் சிறுமி துஸ்பிரயோகம் ; விடுதிக்கு சீல் வைப்பு

கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்...

தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபனின் நான்காவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் போராட்டம்...

கவனிப்புக்கும், கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ள மருதங்கேணி!

வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி கல்வியைத் தொடரமுடியுமெனவும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அடங்கிய குழுவினரையும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த சிறீலங்கா அதிபர் சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது மாணவ குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற...

வணக்கதலங்களை புனரமைப்பதை விடுத்து யுத்தத்தால் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை புனரமையுங்கள்

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்கறையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத்...

பரீட்சை முறைகேடுகளை முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம்

பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரியினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய commissionerdoe@gmail.com என்ற மின்னஞ்சலினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் முறைபாடுகளை 24 மணிநேரமும் ஆராய்வதற்கான...

கஞ்சாவுடன் பூசாரி கைது

இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை...

பஸ்ஸில் ஏறிய இளைஞன் பணம் கொடுக்காது ரகளை

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து, புதன்கிழமை (03) இரவு, பருத்தித்துறைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில், மதுபோதையில் குழப்பம் விளைவித்த இளைஞனை, பயணிகளும் பஸ் நடத்துநரும் பிடித்து தங்களிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி பொலிஸார் கூறினர். பஸ்ஸில் ஏறிய இளைஞன், பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான பணம் கொடுக்க முடியாது என நடத்துநருடன்...
Loading posts...

All posts loaded

No more posts