Ad Widget

யாழ் மாவட்டத்தில் போதையிலிருந்து விடுபட்ட நாடு

போதையிலிருந்து விடுபட்ட நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது மாவட்ட நிகழ்வு யாழ்ப்பான மாவட்டத்தில் இடம் பெற்றுவருகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

யாழ் மாவட்டத்தில்; பாடசாலை மாணவர்கள், அரச அலுவலகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தும்; நிகழ்ச்சிகள் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாண மாவட்ட செயலாளரின் தலைமையில் இவை இடம் பெறுகின்றன.

இது வரை சங்கானை , ஊர்காவற்துறை , உடுவில் , மருதங்கேணி , பருத்தித்துறை மற்றும் நல்லூர் பிரதேச செயலகபிரிவுகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. காரைநகர் பிரதேசசெயலக பிரிவில் வீதிநாடகம், விழிப்புணர்வு கருத்தரங்கு, பொது மக்களை தெளிவூட்டல் நிகழ்வுகள் முதலாவை இடம்பெற்ள்ளன.

Related Posts