நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 அல்லது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டிற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ள குறித்த காற்றின் வேகம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதிக்கு பின்னர் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் நிபுணர் புத்திக்க பன்துரத்ன தெரிவித்துள்ளார்.