Ad Widget

காற்றில் பறந்த உறுதிமொழிகள் மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும் அந்த காணியும் இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்படாத நிலை யில் எஞ்சிய பொதுமக்களின் காணியையும் விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மாலை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பரவிப்பாஞ்சான் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த வாரம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் 17 ஆம் திகதி வரை முன்னெ டுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தல வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வாக்கு றுதியளி த்தவாறு 14 நாட்க ள் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், காணி விடுவிக்கப்படாமைக்கு எதிராக பொது மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பி டத்தக்கது

Related Posts