யாழில் அதிபர்களுக்கான வெற்றிடம்: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சென் ஜேம்ஸ் வித்தியாலயம் (வகை-2), நாவாந்துறை றோ. க. வித்தியாலயம் (வகை-2), கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் (வகை-2), கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம் (வகை-2), கொழும்புத்...

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார். மேற்குறித்த வழக்கு நேற்றய தினம் செவ்வாய்க்கிழமை(9) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த மாணவியின் கொலை தொடர்பிலான விசாரணை குறித்து...
Ad Widget

 எரிபொருள் விலை குறைப்பு

எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் மற்றும் எக்ஸ்டா மைல் டிசல் ஆகிய எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் தற்போது 121 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன் விலை 2 ரூபாயால் குறைவடைகின்றது. 97 ரூபாய்க்கு விற்கப்படும் எக்ஸ்டா மயில் டிசல்,...

பெண் பொலிஸார் தேவை

பெண் பொலிஸ் உப பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் 2016.07.29ஆம் திகதி வெளியிடப்பட்ட 1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகைமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.08.29 ஆகும்.

தயா மாஸ்டருக்கு நீதிமன்றம் அழைப்பானை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நாளை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, தயா மாஸ்டருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்....

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மழலைகளின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 129 பேர் காயமடைந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில்...

அம்மன் ஆலயத்திற்குள் விகாரைக்கு மதில் அமைக்கும் இராணுவம்!!

கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...

புனர்வாழ்வளிப்பு காலத்தில் போராளிகளுக்கு விஷ ஊசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம்!! சுரேஷ்

தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற முன்னாள் போராளிகளின் மர்ம சாவு, வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரையில் 105 முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது. புனர்வாழ்வளிப்பு காலத்தில்அவர்களுக்கு ஏதேனும் விஷ ஊசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அண்மையில் ஒட்டுச்சுட்டானில்...

இலங்கையில் இனரீதியான நீதிமன்றம் செயற்பாடுகள் காணப்படுகின்றன -கஜேந்திரகுமார்

மூதூர் படுகொலை சம்பவம் மீதான விசாரணை இன்மையும், குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பும், சிறிலங்காவில் உள்ள நீதிமன்றங்களின் பக்கச்சார்பு தன்மையை பறைசாட்டுகின்ற என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனரீதியான நீதிமன்றம் செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சிங்களவர்கள் சிங்களவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை...

பஸ்ஸில் கைவரிசை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சியாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த...

ஜனாதிபதி ஆணைக்குழுவால் நம்பிக்கை இழந்துவிட்டோம்

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது எமக்கு நம்பிக்கை அற்று போய்விட்டது. சர்வதேச விசாரணை ஒன்று தான் எமக்கு தற்போது உள்ள நம்பிக்கை. தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு தீர்வு இல்லாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என காணாமல் போனவர்களின் உறவுகள் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்தனர். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று...

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அரசு முயற்சி

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. குமாரபரம் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய 6 பேருக்குமான தண்டணை வழங்குவதற்கு யூரர் சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்றது என்றால், ரயலட் பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன்,...

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன்: அனந்தி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு விஜயம் செய்து, மகளிர் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பலரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது...

நடிகரும் இயக்குநருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற படத்தில், நடிகராக அறிமுகம் ஆனார். இதன்மூலமாக, வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற கவுரவம் என்ற படத்தை...

கணவனின் சடலத்தை கொடுக்க இராணுவம் விதித்த நிபந்தனை! பெண் கண்ணீர் சாட்சியம்

வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்தது என்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது....

107 வது முன்னால் போராளி மரணமானார்

திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...

கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல்

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலில் உள்ள கற்பாறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில் அகற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன்...

பொன்னாலை வரதராஜப் பெருமாள் பெருந்திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இப் பெருந்திருவிழாவில் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும், 25 ஆம்...

யாழ். பல்கலையின் தொண்டர் ஊழியர்கள் பணியிலிருந்து நிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை நேற்று நடத்தினர். சம்பள அதிகரிப்பு கேட்டு அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே யாழ்....

தரம் 05 மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற இருப்பதால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை...
Loading posts...

All posts loaded

No more posts