சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு...

சிவகரன்,அனந்தி ஆகியோரது உறுப்புரிமை பறிப்பு!

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம்!

இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்ற காலை 9.00 மணியளவில் இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் இந்தியத் தேசியக் கொடியினை ஏற்றி, குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் இன்னிசைக்...

ரயில் மீது மீண்டும் கல்வீச்சு

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த ரயில் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு பிரிவு படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில மத்தியில் உள்ள ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் விவகாரம்: விஷேட வைத்தியர்களுடன் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்காக விஷேட வைத்தியர்களுடன் மூன்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி, இவர்களை பூரண வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலான உண்மைத் தன்மை பற்றி மட்டுமே ஆராயப்படவுள்ளது...

நாமல் மீண்டும் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆடைத் தொகுதியில் பிரபாகரனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த துணி...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை...

அரசியல் கைதி இராசையா ஆனந்தராசாவிற்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராசாவிற்கு விச ஊசி ஏற்றப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படவில்லையென யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இராசையா ஆனந்தராசாவிற்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வைத்திய பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் மனதளவில்...

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த சன்முகராஜா துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுமார் எட்டுமணியளவில் வீட்டில் இருந்த நிலையில் குறித்த சிறுமி காணமல் போயிருந்தார். இதனையடுத்து...

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம்; எம்.ஏ. சுமந்திரன்

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்!!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, இந்தியாவின் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மற்றும் மனந்தவாடி துணை கலெக்டர்களினால், மனந்தவாடிக்கு அருகில் உள்ள கம்பமால கொலனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'குறித்த அகதிகள், அங்குள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்....

முகமாலையில் கண்ணிவெடி: ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு கண்ணிவெடி வெடிப்புச் சம்பவங்களில் ஒரு கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்தோடு, மற்றொரு சம்பவத்தில் பொது மகன் ஒருவர் பலியாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12 திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த...

பொங்கு தமிழ்போல பொங்குவோம்: கூட்டாகத் தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத்...

மைத்திரி, ரணில் அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்! உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை

சிறிசேன - ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலக சட்ட மூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியமை உலகத் தமிழர் பேரவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அந்த அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது குறித்து உலகத்...

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும்...

படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள்!! ஜனாதிபதி உறுதி

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்பு படையினர்...

யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது...

மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்!

யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என, காணாமல் போனோரின் உறவினர்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவடைந்த யுத்தத்தில் தனது பங்கு என்ன? கூறுகிறார் சந்திரிக்கா

யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறுவதாக, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தானது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை...
Loading posts...

All posts loaded

No more posts